Saturday 16 October, 2010

Big Fish..

No comments:
Big Fish.. - The movie I accidentally heard from my brother, downloaded, saw it and immediately posting on it. Thanks to my brother for referring this film and Tim Burton for putting a great effort in making this movie. It was a heart fulfilling movie in a long time.

I don't actually fancy fantasy movies. But this one is one of its kinds. The movie starts with a father telling how his son was born and unfortunately his doesn't like it just the 1000th time. But the father is never tired. After long time, the son has to meet again his father who's nearing death but not yet. There begins the story with an alternating screenplay of his father's story and his revolving in regular intervals.

The catch of the movie is that the way you want your life to be. You can want it to be the fancy interesting way or the normal boring mode. Its how you take it. Adding a little essence ain't gonna spoil the juice. But you gotta believe it as fresh juice. That's the magic. 

After seeing the movie I got to know a lot of things that I cant explain. You sure will do..


Thursday 14 October, 2010

Copy Cats reloaded..

No comments:
Somtime back, there was a post on copy cats which I felt the right thing to be posted. This time its kinda different. I feel very bad in posting this. But "Reality bites". The link I gave below is of a funny ad. But once I saw it, a scene from a famous box office movie flashed my mind. Its from the creators I believed in India having the talent of bringing genuine and original humour. After seeing this I lost hope on them too.

Guess which film it is by watching the video.. (I guess its quite simple!!!)

http://www.youtube.com/watch?v=TwJK1lURhhk&feature=related

Monday 11 October, 2010

கடவுள் உள்ளம்

No comments:
கடவுள் உள்ளம்.. இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் bhookh.com எனப்படும் இணைய தளத்தின் வலைப்பக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு முறை நீங்கள் அதில் உள்ள "Give free food" என்ற பொத்தானை அழுத்தும் போதும் ஒரு குழந்தைக்கு உணவு கிடைக்கிறது. இதை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என் அலுவலகத்தில் முந்தைய project ல் என்னை வழி  நடத்தியவர். மிக அற்புதமான வாய்ப்பு. தினமும் உதவும் வாய்ப்பு. உணவு மட்டுமே போதுமா? இலவசமாக நம்மால் இது முடிந்தால், நம் சொந்த பணத்தில் ஏதேனும் பூர்த்தி செய்ய முடியுமா?

என் அண்ணன் நேற்று ஒரு ஆதரவற்றோர் (அனாதை என்பதை விட இது உசித்தமாக பட்டது) இல்லத்திற்கு சென்று அவர்கள் வேண்டும் என்று கேட்டதை வாங்கி தந்து விட்டு வந்திருக்கிறார். அவர்கள் அவருக்காக கடவுளை பிரார்த்தித்த பொழுது மிகவும் வேதனையாக இருந்தது என்றார். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் இவர்களை இறைவன் அந்த மற்றவர்களை போல் வைக்கவில்லையே. அவர்களுக்கு உணவு பஞ்சமில்லை போலும். என் அண்ணனிடம் Fan, soap போன்ற இரண்டாவது வரிசை அத்தியாவசிய பொருட்களாக கேட்டிருக்கிறார்கள். நானும் ஒரு மாதம் முன்பு வெறும் பணமாக இருநூறு ரூபாய்கள் குடுத்தேன். போய் சேர்ந்திருக்கும். இருப்பினும் அவர்களுக்கு தேவையானதை பணத்தை விட பொருளாக குடுப்பது மேல் என படுகிறது. அது தோன்றும் அனைவருக்குமே கடவுள் உள்ளங்களே..

http://www.bhookh.com/ - இதை உங்கள் Homepage ஆக மாற்றி கொள்ளுங்கள்..

Wednesday 6 October, 2010

எந்திரன்..

1 comment:
எந்திரன்..- முதல் நாள் பார்க்கும் வசதி இல்லாமல், காத்திருந்து ஐந்தாம் நாள் டிக்கெட் விலை ஐம்பதாக குறைந்த பின் அருகில் உள்ள தியாகராஜா வில் நேற்று இரவு சென்றோம். சாரு நிவேதிதா "குப்பை படம்" என்று சொன்னதிலிருந்தே படம் ஓரளவு இருக்கும் என்று நம்பிக்கையுடன் சென்றேன். நம்பிக்கை பொய்க்கவில்லை. சிவாஜியை விட ஆயிரம் மடங்கு தேவலாம். 


ரஜினிக்கென்று எந்த வித சர்கஸ் அறிமுகமும் இல்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல், ரசிகர்களின் "தலைவா" வுடன் தொடங்கியது படம். முதல் காட்சியில் இருந்தே படம் உயிர்பெற்று நகர்ந்தது. படத்தில் வரும் ரோபோவும். இயல்பாக கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்குவதில் தான் எந்த வகையிலும், யாருக்கும் குறைந்தவரில்லை என்பதை ரஜினி நிரூபணம் செய்திருக்கிறார். வசீகரன் சிட்டியை அதாவது சிட்டி என்கிற ரோபோவை உருவாக்குகிறார். உலகிலயே மிக அதிநவீன humanoid      
வகை ரோபோ அது. கார் ஓட்டுகிறது, T.V. யை உடைக்கிறது, 'who is chellattha?" என்கிறது, சொன்னதை சொன்ன படி செய்து காமெடி செய்கிறது. அனால் உணர்ச்சி இல்லாமல் செய்கிறது. Evaluation இல் அதனால் fail உம ஆகிறது.


அதை ராணுவத்தில் பங்காற்ற வைப்பதற்காக உணர்ச்சி புகுத்த முயற்சிக்கிறார் வசீகரன். உணர்ச்சியே வினையாகிப்போய் முதாளிளியின் காதலியையே காதலிக்கிறது, கைபிடிக்க நினைக்கிறது. கையை பிடித்ததா என்பது தான் Climax (ஆங்... அத சொல்ல மாட்டேனே.. ).


முதல் பாதி முழுக்க சொதப்பல்களே இல்லாமல் பயணிக்கும் கதை, பின் பாதியில் அதை தவிர்க்க முடியாமல் திணறுகிறது. அதில் ஒரே ஆறுதல். ரஜினியின் வில்லத்தனம் (என்ன வில்லத்தனம்...) மட்டுமே. மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். "வசி.. மேஹ்ஹாஈ.. " என ஆடு போல் கத்தி கிளப்புகிறார். பாடல்களும், பின்னணி இசையும் மிகவும் சுமார். 
ஒளிப்பதிவும், CG உம், படத்தை தூக்கி நிறுத்துகின்றன. 


மொத்தத்தில் முதல் பாதி சுஜாதா பளபளக்கிறார்.. பின் பாதியில் ஷங்கர் பல்லை இளிக்கிறார்.. DOT..