Sunday 30 August, 2009

கந்தசாமி..

3 comments:

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை Citi Centre ல்உள்ள INOX திரையரங்கத்தில் கந்தசாமி படம் பார்க்க நேர்ந்தது (குழம்ப வேண்டாம் சரியான வார்த்தை உபயோகம் தான். உதாரணம் - "விபத்து நேர்ந்தது"!).

ஊரில் உள்ள மக்கள் அனைவரும் குறை தீர்க்க கந்தசாமியிடம் வேண்டுகிறார்கள். கந்தசாமியும் தீர்த்து வைக்கிறார்.
இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு படத்தை இரண்டே முக்கால் மணி நேரம் இழுத்தடித்திருக்கிறார்கள்.
முதல் காட்சியில் ஏழைப்பெண்ணின் அப்பாவின் அறுவை சிகிச்சைக்கு கந்தசாமி கொடுத்த பணத்தை விழுங்கப்பார்க்கும் காவல் அலுவலர் மன்சூர் அலி கானை சேவல் ரூபத்தில் வந்து தண்டிக்கிறார் கந்தசாமி. முருக பகவானின் கொடியில் இடம்பெற்ற ஒரே காரணத்தை தவிர சேவல் அவதாரத்திற்கான காரணம் படத்தின் கடைசிவரை விளங்கவில்லை.

படத்தின் நாயகி ஷ்ரேயா சரண். அவரிடம் இருந்து பெரிதாக எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், வெறும் அழகு, மன்னிக்கவும், வெறும் பொம்மையாக மட்டும் அலைவது எரிச்சலை தருகிறது.
சேவல் அவதாரமே தலை முடியை கொத்திக்கிளரியது போல ஒரு சிகையலங்காரம்.


தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி மற்றும் பாடல் இசை காதை பதம் பார்க்கிறது. காதை மூடிக்கொண்டு கேட்டாலும் இசை துல்லியமாக விழுகிறது. குறிப்பாக "என் பே.. என் பே.. என் பேரு மீனாகுமாரி" என்ற கருத்தாழமிக்க பாடல்.

காதையாவது மூடிக்கொள்ளலாம். கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்க முடியுமா? தொகுப்பாளர் அந்த சிரமத்தையும் பார்வையாளர்களுக்கு தருகிறார். ஒரு வினாடி கூட ஒரே இடத்தில் நிற்க மறுக்கின்றன காட்சிகள்.

காவல் துறை அதிகாரியாக வரும் பிரபுவுக்கு சாமன்யருக்கு கூட உடனே தோன்றும் யோசனைகள் மிக மிக தாமதமாகவே தோன்றுகின்றன. அதற்குள் கந்தசாமி அல்வா குடுத்து விடுகிறார். படத்தில் அவர் சொல்லும் "Bull shit" , "என்ன கொடும சரவணன் இது" க்கு பிறகு மிகவும் குறிப்பிடத்தகுந்த வசனம்.

துக்கடா வங்கியில் கூட வாடிக்கையாளரின் கணக்கில் பணம் போடப்பட்டலோ எடுக்கப்பட்டலோ உடனே அவரின் செல் பேசிக்கு குறுந்தகவல் செல்லும் வசதி உள்ளது. ஆனால் ஆஷிஷ் வித்யார்த்தி முழுவதும் மொட்டையடிக்கப்பட்டும் தாமதமாக இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்வது நம்ப முடியாத வகையில் உள்ளது.

முடிவாக கந்தசாமிக்கு நான் ஒருவேண்டுதல் விடுக்க போகிறேன். "சாமி இனிமே யாரும் என்னைய மாதிரி ஏமாந்து கந்தசாமி பாத்திரக்கூடாது"..

Wednesday 26 August, 2009

ரமலான்..

4 comments:

ரமலான் - ரம்ஜான் என அழைக்கப்படும் இந்த பண்டிகை (மட்டுமல்ல ஒரு மாதமும் கூட) விரைவில் வந்து அனைவருக்கும் ஒரு நாள் விடுமுறை தரப்போவது திண்ணம்.

ஆனால் முசல்மான்களுக்கு அது ஒரு புனித மாதம். என் அறை நண்பர் ஓர் இஸ்லாமியர். ரமலான் மாதம் ஆரம்பித்த நாளிலிருந்து விரதம் இருக்கிறார். மாதம் முடியும் வரை.

விரதத்தின் ஒழுங்கு இதுதான். முடிந்தால் முயன்று பாருங்கள்.
1. காலை நான்கரை மணிக்கு முன்பு காலை உணவை உட்கொள்ள வேண்டும்.
2. மாலை நமாஸ் வரை எச்சிலை கூட விழுங்கக்கூடது (நீங்களாக) .
3. மாலை நமாஸுக்கு பிறகு சாப்பிட்டு விட்டு மறுநாள் back to pavillion.

பார்த்தால் மதச்சடங்காக தெரியும் இந்நோன்பினால் நிறைய நன்மைகள் உள்ளன. வாரம் ஒரு நாள் விரதம் இருப்பது உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

அதே போல, வருடத்தின் எந்த நாளும் எந்த தடையும் இல்லாமல் வயிற்றை அடைக்கும் நாம். ஒரு மாதம் கட்டுப்பாடுடன் ஒரு வேளை உணவை தியாகம் செய்தால் உடல் நலம் உறுதி.

எல்லா மதங்களிலும் இது போன்ற வழக்கங்கள் இருக்கின்றின. அவைகளை கடைபிடித்தால்
சுகி சிவம் சொன்னது போல

இந்த நாள் மாத்திரமல்ல எல்லா நாளுமே இனிய நாள்..

Sunday 23 August, 2009

ஆதவன்..

1 comment:
நேற்று முன்தினம் ஆதவன் பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கேட்டேன். K.S. ரவிக்குமார் இயக்குனர் என்பதாலோ என்னவோ Harris மிகவும் மெனக்கிடாததுபோல் தெரிகிறது. மொத்தம் உள்ள ஆறில் தேறுவது ஒன்றரை மட்டுமே.

வாராயோ.. வாராயோ.. - 1
Hasli Fisli - 1/2. (Gajni "Behka Behka" சாயல்)

Harris இன் வெற்றியே அவர் இசையுடன் இனிய வரிகள் இணையும் magic. Sorry That's missin here...

தமிழில் வார்த்தை பஞ்சம் ஏற்பட்டது போல் அனைத்து பாடல்களும் உயிரின்றி இருக்கின்றன..
Completely dissappointing compilation of tracks..

Saturday 22 August, 2009

Little Miss Sunshine..

No comments:
Little Miss Sunshine - Can you guess something from the title? If you guess so, sorry, You're wrong..
I came to know about this movie when I watched the Oscar awards show in 2006. In that this movie was competing with" The Departed" and "The Babel". So I decided to download and see this movie. Unfortunately I dint get a chance.
Two days back when I was chatting with my friend (office la than..), he asked whether I have seen this movie. By that time I got a spark in the mind and decided to see it in two days and saw it.
Coming back to movie.. the story starts with a beauty pageant TV telecast. A little girl (Olive) watches the show eagerly. There's a reason behind that. She's also going to participate in one such pageant!! She regularly rehearses with her grand father for that. Suddenly she comes to know that the last competition she lost is not really lost. The winner of that pageant forefitted and our Olive becomes winner of that and hence she qualifies for "Little Miss Sunshine".
But unfortunately her family is full of losers a spoiled Grand father, a bankrupt father, wanting divorce mother, wanna-be-pilot colour blind brother and a suicide attempt gay uncle. Their family couldn't afford a flight travel and they arrange a self driven bus.
The obstacles they come across and the way they reach to the pageant forms the rest of the story. But the success of the story is its sarcasm. The way it is being told and outcome of it. Its not just a film of a girl who wants to be a beauty queen. It is a story to show only winners are not the successful souls in this world.
The grand father's character is a notable one (got an oscar for best supporting actor). He uses the a beauty pageant itself to show how ugly the world has become because of these shits.
The performance Olive gives in the final round of the pageant to prove her talent is amazing. It doesn't prove her talent. It proves something else.. Do see the movie and understand it.
"Little Miss Sunshine" is a self criticized beauty pageant..

Love Aaj Kal..

2 comments:

Don't see it..
தயவு செய்து பார்க்க வேண்டாம்..
देख मत ..

Tuesday 18 August, 2009

బొమ్మరిల్లు (Bommarillu)

No comments:


Bommarillu - which hit the cinemas 2 years back and made a good fortune. Not only the collection, it earned a better name. I got to see the movie yesterday (asusual late..). Is it worth the name and fame it gained? Remade in tamil and went well here too (none other than our "Jeyam" Ravi).
The story is explained in the first scene itself. The father who is not letting his son's hand even after 24 years fearing that he may fall down. In contrast to normality, an extra caring father is the problem for the hero in this movie. He gives him more than what he wants. Is it a problem? - asks one of the bypassing characters in the movie. Yes it is......
Siddharth (hero peru) decides two things in his life to be as desired by him.
1. His career
2. His lady love.
If a film is made on the first one, will any one see it? The direrctor is clever about the audience and he picked the second choice. (career - who cares?)..

He sees a girl,flattered by her character,falls in love, yells the love in road, gets caught by his father. The Father asks the son how to believe that the girl is suitable for his family? For that she has to stay a week in their house, the son says. The father accepts (Good family!!!). Then starts బొమ్మరిల్లు..

In tamil I have seen the film and felt a bit disappointed by the acting of both the leads. But in telugu both Siddharth and Genelia did their job quiet well. But what makes the film a blockbuster? The supporting actors.. Especially the father, done by Prakashraj.

Prakash Raj has a hold on the movie and portrays a typical high class నానా (father) .. The way he chooses the best for his son, and atlast while realises how far he influenced his son - Hats off..

As said in the movie, bommarillu is the one man show of a father until he realises everybody should play their role including his son..





Monday 17 August, 2009

தமிழ் இனி மெல்லச் சாகும்..

3 comments:

தமிழ் இனி மெல்லச் சாகும் - பாரதியின் வார்த்தைகள். கண்கூடாக கண்டேன் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த பொழுது. மதுரை ரயில் நிலையத்தில் மாலை ஆறு முப்பது மணிக்கு, அரை மணி நேரம் தாமதமாக (வழக்கம் போல) நான் செல்ல வேண்டிய வண்டி வந்தது. என்னுடைய இடத்தில் சென்று அமர்ந்தேன்.
அடுத்த நிறுத்தத்தில் ஆண்,பெண் பேதமில்லா பதினைந்து மாணவர்கள் (நினைக்கிறேன்) ஏறினார்கள். உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் தான். வேற்று மொழி பேசுபவர்கள் என்று நினைதேன். சற்று நேரத்தில் ஒருவன் கேட்டான் "மச்சா டிக்கெட் எங்க டா? " (நமீதா தம்பியா இருப்பான் போல). மற்றவன் சொன்னான் " அந்த bag ல தான் மச்சா இருக்கு " (இவுனுமோ)
தமிழர்கள் என்று தெரிந்தது. பின் ஏன் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ள வேண்டும். ஒருவேளை தங்கள் ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள பழகலாம். ஆனால் அவர்கள் ஆங்கிலத்தில் வளர இன்னும் எதுவும் மிச்சம் இல்லாதது போல் தெரிந்தது. பிறகு தான் தெரிந்தது அவர்களால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தமிழ் பேச முடியாது. மேலும் அவர்களால் தமிழ் சுத்தமாக படிக்க முடியாது. அவர்களை பார்த்து மிகவும் பரிதாபப்பட்டேன். எப்படி முறையான கல்வி கிடைக்காத ஏழை சிறுவனை பார்த்து பரிதாபம் வருமோ அது போல். இவர்களும் அவர்களும் சரிசமம் தான்.
எப்படி:? - இருவருக்குமே சரிவிகித கல்வி கிடைக்கவில்லை. ஆங்கிலம் கற்க முடியாதது மட்டும் குறை அல்ல. தாய் மொழி கற்க முடியாததும் குறை தான். இதற்கு காரணமாக எனக்கு இரண்டு விஷயங்கள் படுகின்றன.
1. அடிப்படை தமிழ் கல்வி கிடைக்காதது.
2. பெற்றோர்கள் தமிழை அவசியம் என்று நினைக்காதது.
ஆங்கிலம் எவ்வளவு அவசியமோ அதே அளவு தமிழும் அவசியம் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழனாக இருந்து கொண்டு தமிழ் எழுத பேச தெரியாதது வெட்கக்கேடு.
கடைசியாக ஒரு பெண் சொன்னாள்
"Charles, Shut the f*** up and sleep"
அதை நான் வழி மொழிகிறேன்..

Thursday 13 August, 2009

स्वदेस (ஸ்வதேஸ்)..

1 comment:
ஸ்வதேஸ் - நம்நாடு என்று பொருள் கொண்ட இந்த படத்தை இலவசமாக பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது (அட பதிவிறக்கம் (அதாவது download) பண்ண print தான் பா).


ஆனால் இரண்டு நாட்களாக பார்க்க வேண்டி இருந்தது (படம் கொஞ்சம் பெருசு). மூன்று மணி நேரம் பெரிய திருப்பங்கள் ( சடார்னு police ஆ மாறுவது, climax ல மூக்கில் இருந்து குருதி கொட்டுவது) இல்லாமல் , அதே சமயம் அலுப்பு தட்டாமல் கதையை நகர்த்த முடியுமா? முடியும் என்று நிரூபிக்கிறார் அஷுதோஷ் க்வாரிக்கர் (அவர் தான் டைரடக்கர்..) . ஆங் லகான் எடுத்தாரே அவரே தான் (அப்டி சொன்னா தானே நம்ம சிவகாசிக்கு புரியும்).

படம் நாசாவில் துவங்குகிறது. கதையின் நாயகன் மோகன் 'Global Precipitation Measurement' project இன் மூளையாக இருக்கிறார். தன் சிறுவயதில் தன்னை பார்த்துக்கொண்ட 'காவேரியம்மா' வை வயதான காலத்தில் கவனிக்காமல் விட்டதற்காக வருந்தி இந்தியா செல்கிறார். அதை தொடர்ந்து அவர் பார்க்கும் இந்தியாவும், அதன் நிலைமையும் காட்சிகளாக விரிகின்றன.

இந்தியாவில் இன்னமும் இத்தகைய கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று காட்டும் போது பாராட்டுகளை அள்ளுகிறார். சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரே காட்சியில் நாட்டை திருத்தவில்லை மோகன். அவன் வந்த நோக்கம் - தன் காவேரியம்மவை தன்னுடன் அழைத்து செல்ல. ஆனால் அங்கு அவனுக்கு கிடைக்கும் அனுபவம், அவன் மனதை மாற்றுகிறது.

நாயகியின் பாத்திரமும் நாயகனுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. காவேரியம்மவை மோகன் கூட்டிக்கொண்டு சென்று விடக்கூடாதென்று தவறாக வழி சொல்லும் இடம் சுவாரசியமானது.

கிராமத்தியே, ஒரே காட்சியில் சொர்க்க பூமியாக மாற்றும் சினமாத்தனம் இல்லாமல், மின்சாரம் உற்பத்தி செய்து, உதாரணமாக இருக்கும் போது தனித்து தெரிகிறார் இயக்குனர்.

மொத்தத்தில் இயல்பும் தர்க்கமும் மீறாத 'சிவாஜி - The Real Boss'..










Monday 10 August, 2009

GU.. LU.. TE

2 comments:

என் அறை நண்பர் ஒரு தெலுங்கர். வெகு நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். ஏன் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களை "கொல்டி" என்று அழைக்கிறார்கள் என்று. அவரிடமே கேட்டு விட்டேன். அது போல் ஏதும் வார்த்தை தெலுங்கில் உள்ளதா என்று. அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் "ಲೆದು". ஆனால் அவருக்கு ஏன் தான்
"கொல்டி" என்று அழைக்கப்படுகிறோம் (உண்மையில் கேலி) என்று தெரிந்திருந்தது. பின் வருமாறு கூறினார்.
ஆங்கிலத்தில் தெலுங்கை உச்சரிக்க சொன்னார். சொன்னேன். "TE.. LU.. GU..".
தலைகீழாக உச்சரிக்க சொன்னார். "GU.. LU.. TE". வேகமாக..
"GU.. LU.. TE"
"GU.. L.. TE"
"GULTI".
"Thats கொல்டி" சொன்னார் பாந்தமாக!! "கொல்டி" என்று சீண்டப்படும் அவர்களை விட நாம் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் (மன்னிக்கவும்) நம்மை விட பல விஷயங்களில் முன்நிற்கிறார்கள். 100 தமிழர்களில் எத்தனை பேரால் ஹிந்தி புரிந்து கொள்ள முடியும்? அவர்களில் 60 சதவிகிதத்தினர் புரிந்து கொள்வர். இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் ( அதாம்பா IIT) அதிகம் இடம் பிடிப்பவர்கள் அவர்களே..
நான் இருக்கும் மென்பொருள் துறையில் அதிகம் (இப்போது தெலுங்கர்கள் மன்னிக்கவும்) "கொல்டி" களே.
கடைசியாக "பஞ்சதந்திரம்" வசனம் ஞாபகம் வந்தது..
"'TE LU GU'.. 'GU LU TE' .. தாண்டா 'கொல்டி"..

Sunday 9 August, 2009

சுயநலம்..

No comments:
என் சக ஊழியர் ஒருவர் மற்றொரு சக ஊழியரை ஏசினார் "You're a Selfish goose" (அவர்களுக்கு தமிழ் தெரியாது).
எதற்காக?
முன்தினம் தன் வேலை முடிந்ததும் எப்பொழுதும் கூட செல்லும் இவரிடம் சொல்லாமல் சென்றதற்காக. அது சரியா? உண்மையில் அவர் ஒரு சுயநல வாத்தா? ( selfish goose!!).














சுயநலம் - நல்லதா? கெட்டதா?


It depends..


ஒருதின விளையாட்டிலோ, ஒலிம்பிக் பந்தயமோ இந்தியா மட்டும் எல்லா போட்டிகளிலும் வென்று விட வேண்டும் என்று பகல் கனவு காண்போர் எத்தனை பேர் (including me..)? அது நல்ல சுயநலமா? கெட்ட சுயநலமா?

கார்கில் போரோ, குழாயடி சண்டையோ நம்மவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். அது சுயநலமா?

எல்லோருள்ளும் சுயநலம் குடி கொண்டிருக்கிறது. அது "Selfish goose" ஆக மாறும்பொழுது தான் பிரச்சனை.

மற்றவரை பாதிக்காத எந்த ஒரு ஆசையும் சுயநலம் அல்ல என்று நான் கருதுகிறேன்.

Vivek வசனம் போல் உங்கள் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருந்தால் மிக நல்லது..

நாடோடிகள்..

3 comments:

நாடோடிகள்- சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படம். மையக்கரு இதுதான். காதலர்களை சேர்த்துவைக்கும் போது பட்ட கஷ்டத்திற்காக அவர்கள் பிரியும் போது கொதித்தெழும் நண்பர்களே நாடோடிகள்.
மேலோட்டமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பார்க்கும் பொழுது நண்பர்களின் கோபம் சரியாக பட்டாலும், கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் அக்கோபம் அவசியமற்றது என்று புரியும். கால் உடைந்து, முகம் கிழிந்து, காது செவுடாகி சேர்த்து வைத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எந்த வகையிலும் மனம் ஒட்டாத இருவர் சேர்ந்து வாழவேண்டுமென்பது அபத்தம். பிறகு சசிகுமாரின் மாமாவிற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.
படத்தின் மற்றொரு எரிச்சல், மன்னிக்கவும், சசிகுமார் தான். மற்ற இரு நாடோடிகளுக்கும் வரும் அனாயசமான நடிப்பு சசிகுமாரிடம் missing. படத்தின் மிகப்பெரிய பலம் துணை நடிகர்கள். அனைவருக்கும் நடிப்பு மிக இயல்பாக வருகிறது. குறிப்பாக சசிகுமாரின் தங்கை, காதலி, அப்பா, அம்மா, மாமா ஆகியோர்.
தனித்தனி திரைத்துளிகளாக மின்னினாலும், மொத்தமாக பார்க்கும்பொழுது கதையின் இரண்டாம் பாகம் தேவையற்றதாகவே தோன்றுகிறது. முடிவும் முழுமையற்று இருப்பதால் பச்ச்..

Saturday 8 August, 2009

முதல் நாள்.. முதல் விஷயம்..

7 comments:

This is the first post in this blog as well as my life. This blog is to share our views on things we experience daily. As everything starts with கடவுள் வணக்கம் I dont wanna be an exclusion from that.

Recently I ve been to తిరుపతి (தமிழ் ல திருப்பதி) . Usually we wonder how even on daily working days people rush to that temple. அண்ணன் கொஞ்சம் different. I wondered the way the temple and the city is maintained. Its obviously a million dollar question whether it would have been maintained this good if it belonged to Tamilnadu (கஷ்டம் தான்!!).

Many of you might have known this already, but i wanna share it again now. There was a confusion whether to give tirupati or chennai to TamilNadu long back. Fortunately Tirupati went to Andhra and நம்ம கெட்ட நேரம் chennai was given to TamilNadu. We may have a question Chennai ல தான் எல்லாம் இருக்கே!! சொல்றவங்க இங்க வந்து வாழ்ந்து பாருங்க தெரியும்.

I am not comparing chennai's features with tirupathi's. By seeing the maintanence of Chennai I feel happy that Tirupathi was fortunate.

திருப்பதி தமிழ் நாட்டோட இருந்தா இந்த அளவுக்கு இருக்குமா?
Start Music (உங்க கருத்த சொல்லுங்க..)