Thursday 29 December, 2011

அப்பா எனும் பொதுப்பெயர்..

5 comments:

அப்பா தான் எவ்வளவு மாறிவிட்டார்? அவினாஷ் சென்று எழுப்பினான்.
'வா தாத்தா பால் வாங்க போலாம்'
லாவண்யா அவனிடம் 'தாத்தா தூங்குறா கண்ணா. எந்திரிக்க மாட்டா'
'நேத்து எந்திருச்சாளே!'. யாரிடமும் பதில் இல்லை. 'தாத்தா, தாத்தா'. அவினாஷை தூக்கிக்கொண்டு வெளியே வந்தேன். எனக்கு அப்பாவை ஐம்பத்தைந்து வருடங்களாக பரிச்சயம். அதை வடிகட்டினால் சத்தான சாறாக கடைசி பதினைந்து  வருடங்கள் தேரும். அவினாஷ் போல் நான் இருந்த போது என்னை காலை ஐந்தரை மணிக்கு எழுப்பி, ஹீரோ சைக்கிளின் முன் கேரியரில் அமர்த்தி பேசிக்கொண்டே வருவார்.

'பார்த்தி கண்ணா எங்க போறோம்?'
'பால் வாங்க'
'இந்த சைக்கிள் பேரென்ன?'
'ஹீரோ. ஏன்பா இதயே கேக்கிற தினமும்?'
சிரித்துக்கொள்வார்.
'அப்பாக்கு மறந்துடறது டா'
'பொய்'.
மறுபடியும் சிரிப்பார்.

பத்து வயதுக்கு மேல் கூட்டிக்கொண்டு போவதை நிறுத்திவிட்டார். புதிதாக டி.வி.எஸ். பிப்டி வாங்கியிருந்தார். காலையில் தினமும் என்னை பேருந்து நிருத்தத்திற்கு கொண்டுவிடுவதற்கு முன்னால் அதைத்துடைப்பார். எந்த பொருளையும் சரியாக பராமரிக்க வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தார். என்னுடன் அத்தையும் வருவாள். எனக்காக பாசித் அண்ணா சீட் போட்டுக்கொண்டு வருவான். தினமும் ஏதாவது கேட்பான்.

'உங்க அப்பா என்னடா பண்றார்?'
'கலக்டர் ஆபீஸ்ல ஒ.ஏ. வா இருக்கேன்னு சொன்னார்ணா'
'டேய் ஒ.ஏ னா ஆபீஸ் அசிஸ்டன்ட் டா'
'அப்டினா?'
'பியூன் மாதிரிடா. வெளிய சொல்லாத'
'!!'
'சரி உங்க அத்தை என்ன பண்றா?'

அந்த வயதில் அப்பா பியூன் வேலை செய்கிறார் என்பது ஜீரணிக்க கஷ்டமாகவே இருந்தது. அப்பா என்னிடம் ஏதோ பெரிய உண்மையை மறைத்து விட்டதாக கோபம் கோபமாக வந்தது. பாசித் அண்ணா வேறு வெளியில் சொல்லாதே என்று சொல்லி விட்டான். இனிமேல் அப்பாவுடன் பேசவே கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன்.

'அப்பா'
'ம்ம்'
'ரேன்க் கார்டுல கையெழுத்து போடணும்'
'அதான் முடியாதுன்னு சொன்னேனே'
'இன்னிக்குதான்பா கடைசி நாள். நாளைக்கு குடுக்கலேன்ன சாம்பமூர்த்தி சார் அடிப்பார்'
'வாங்கு. அப்போ தான் அடுத்த தரம் நல்ல மார்க் எடுப்ப.'

இந்த அம்மாவும் எதுவும் சொல்லாமல் பாத்திரம் தேயத்துக்கொண்டிருக்கிறாள்.நாளைக்கு நான் மட்டும் பிரம்படி வாங்கினால் வீட்டுக்கு வரமாட்டேன். இருவருக்கும் அது தான் தண்டனை. காலையில் ரேன்க் கார்டில் கையெழுத்திட்டிருந்தது. அம்மா தான் வாங்கி வைத்திருப்பாள். அம்மா புண்ணியத்தில் அப்பா தப்பித்துவிட்டார். அத்தை இன்றைக்கு சேலை உடுத்தியிருந்தாள். பிறந்தநாள் என்று பாட்டியிடம் நமஸ்காரம் செய்து காசு கேட்டாள்.

 'அவனுக்கு ஸ்கூலுக்கு நேரமாறது வா சீக்கிரம்' , அப்பா விரட்டினார்.
அத்தை ஓடிவந்து ஏறிக்கொண்டாள். அன்றைக்கு பள்ளிக்கு தாமதமாக போய் உக்கி போட்டேன். இன்றைக்கு அத்தையை நன்றாக மாட்டி விட வேண்டும். ஆனால். நான் சொல்வதை கேட்கும் நிலையில் எவரும் இல்லை.
'போயும் போயும் *#$%@^& பயலா கெடச்சான்?'
'அம்மா! வாய மூடு. அதான் இன்ஸ்பெக்டர் போன் பண்ணியிருக்காரே. என்னாறது பாக்கலாம் இரு.'
'என்ன ஆகப்போறது இனிமே.....'

மூன்று மணி நேரத்தில் அப்பா அத்தையை இழுத்துக்கொண்டு வந்தார். அழுது மூஞ்சியெல்லாம் வீங்கியிருந்தது அத்தைக்கு.

'நீ உருப்பட மாட்டடா. நன் செத்து போயிருவேன் இன்னி ராத்திரியே! நீங்கெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது' அத்தை அப்பாவை பார்த்து கத்தினாள். அப்பா கோபமாக ஒரு அறை விட்டார். அத்தை சுருண்டு கீழே விழுந்தாள். அவ்வளவு கோபமாக அப்பாவை நான் பார்த்ததில்லை.

'பார்த்தா நீ பெரிம்மா ஆத்துக்கு போ. நாளைக்கு அங்கேந்து ஸ்கூலுக்கு போலாம்'
'அங்கேந்து ரொம்ப தூரம்பா.'
அப்பா முறைத்தார். அம்மா என்னை உடனடியாக கிளம்புமாறு சைகை காட்டி, என்னை வெளியே அழைத்துச்சென்றாள்.

'அப்பா ஏன்மா இப்படி நடந்துக்குறார். காட்டான் மாதிரி.'
'டேய். அதிகப்பிரசிங்கத்தனமா பேசாத. படிக்கிற வேலைய மட்டும் பாரு. பெரிம்மாட்ட சொல்லிருக்கேன். ஒழுங்கா ஸ்கூலுக்கு போ.'

மறுநாள் தினத்தந்தியில் பாசித் அண்ணன் இதே போன்று மூன்று பெண்களை கலியாணம் செய்துகொண்டுள்ளதாக போட்டிருக்கிறது என பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். நான் நம்பவில்லை. யார் சொன்னாலும் அப்பா அத்தையை அடித்தது தவறு தான். அப்பா செய்வது எதுவும் பிடிக்கவில்லை எனக்கு. ஒரு வருடத்தில் அத்தைக்கு திருவாரூரிலிருந்து ஒரு ஓவர்சீயரை கல்யாணம் செய்து வைத்தார்கள். எனக்கு அத்தை பார்த்தால் பாவமாக இருந்தது. ஆனால் அத்தை சந்தோசமாக இருப்பதாகவே தோன்றியது. பாசித் அண்ணா தான் பாவம். எல்லாம் அப்பாவால் தான்.

அதிலிருந்து அப்பாவிடம் கொஞ்சம் தூரமாகவே இருந்தேன். ஓரிரு வார்த்தைகளில் எங்கள் சம்பாஷணைகள் முடிந்தன. மோட்டார் சைக்கிள் விஷயத்தில் தான் பூதமாக வெடித்தது.
'எதுக்குடி அவனுக்கு இப்போ மோட்டார் சைக்கிள்?' அப்பா
'காலேஜ் தூரமா இருக்காம்' அம்மா
'இவ்வளவு நாள் தூராமா இல்லையோ?'
'ஆமா நாளைலேந்து அஞ்சடி தள்ளி வைக்கறா' நான்.
'அடி நாயே. நக்கல் பண்ராண்டி'
'பேசாம வாங்கி குடுத்துருங்கோளேன்.'
'என்கிட்டே ஏதுடி பணம்.'
'எல்லா அப்பாவும் வாங்கித்தரா'
'உங்கப்பா ஒன்னும் கள்ள நோட்டு அடிக்கல'
'அத பண்ணிருந்தாலும் பிரயோசனமா இருந்திருக்கும்'
கிரிக்கெட் மட்டயைக்கொண்டு அடிக்க வந்தார். 'வேணும்னா நீ சம்பாதிச்சு வங்கிக்கடா.'
'இனிமே உன்கிட்ட பணம் கேட்டா செருப்பாலடி'

அதன் பிறகு அப்பாவிடம் பணம் கேட்கவில்லை. லார்சன் அண்ட் டூப்ரோவில் வேலை கிடைத்தது. நானே பைக் வாங்கிக்கொண்டேன். இனி அப்பாவை நம்பி நான் இல்லை. அம்மாவை நன்றாக வைத்து காப்பற்ற வேண்டும். அப்பா நான் எதிர்பார்ததற்கு மாறாக சந்தோசமாக இருந்தார். 'எல் அண்ட் டி. ஆமா மூணு மாசம் டிரைநிங்காம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிடனும்'

'நான் வசுந்தராவ லவ் பண்றேன்மா'
'அப்பாக்கு கேட்டுரப்போறது டா. மெல்லப்பேசு'
'கேட்கட்டும்னு தான் சொல்றேன்'

அம்மா அடுத்த அறையில் பேசுவது கேட்டது.
'என்னங்க நீங்களும் உளர்றீங்க?'
'இருக்கட்டுமேடி. நல்ல பொண்ணுதான. அவன் இஷ்டப்பட்டபடி நடக்கட்டுமே'

அப்பா மாறியிருக்கிறார். நம்பக்கூடாது. எப்பொழுதும் மாறலாம். கல்யாணம் முடிந்தது. என்னால் நம்பமுடியவில்லை. அப்பா உண்மையாகவே மாறிவிட்டிருக்கிறார். இல்லை நான் மாறுகிறேனா? அதெல்லாம் இல்லை. நன் சரியாக தான் இருக்கிறேன். அப்பாவிற்கு வயதாக ஆக தான் புத்தி வருகிறது. வசுந்தரவிடம் சண்டையிடாமல் இருந்தால் போதும்.

அவளுடன் அப்பா சகஜமாகவே இருக்கிறார். நான் தான் அடிக்கடி சண்டை போடுகிறேன். அன்றைக்கு பெரிய வக்குவாதமாகி அடித்து விட்டேன்.

'பார்த்தா',அப்பா
'மம்'
'பார்ர்த்தா'
'ம்ம்ம்ம்'
'திரும்புடா இங்க'
திரும்பினேன்.
'ஏண்டா அழற?
'அதெல்லாம் ஒண்ணுமில்ல. கொட்டாவி விட்டேன். கண்ணுலேந்து தண்ணி வருது.'
'அவ என்ன பேசிருந்தாலும் கை நீட்டிருக்க கூடாது'
'அவ எதுக்குப்பா அப்பிடி குத்தற மாதிரி பேசறா?'
'அப்டி தாண்டா பேசுவா. அடுத்த க்ஷணம் மறந்துடுவா.'

அப்பா தோள்களில் சரிந்தேன். 'போ. போயி. சமாதானம் பண்ணு.' அப்பாவுக்கும் கொஞ்சம் வாழ்க்கை புரிந்திருக்கிறது. ரொம்பவும் மோசமில்லை.

ரிடயர் ஆகிவிட்டார். ஆனாலும் பிஸியாக இருக்கிறார். ராகவ் பிஸியாக வைத்திருக்கிறான். என் முதல் மகன். ஆனால் முன்பைப்போல் வேகமாக ஓட முடிவதில்லை அப்பாவால். அல்லது ராகவை பிடித்துவிட கூடாதென்று அப்படி ஓடுகிறாரா? எங்களை விட அம்மாவும் அப்பாவும் அவனை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். எனக்கு தான் கவனம் சிதறிவிட்டது. ஷேர் மார்க்கெட்டில் நிறைய விட்டுவிட்டேன். வசுந்த்ராவிடம் சொன்னால் பயப்படுவாள். கோபப்படுவாள். அழுவாள். உண்டாகியிருக்கிறாள். இந்த சமயம் சொல்லக்கூடாது.

'அப்பா'
'ராகவ் அத தொடக்கூடாது. சொல்லுடா.'
சொன்னேன்.
'சரி விடு. என்கிட்டே ஒரு அஞ்சு லட்சம் இருக்கு. அத வச்சு சமாளிச்சுக்கலாம்'
'ஆனா நான்தான் உன்கிட்ட பணம் வாங்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சுருக்கேனே'
'சத்தியம்! பொடலங்கா. வசுந்தராட்ட சொல்லிடலையே'

அப்பா சரியாகத்தான் இருந்திருக்கிறார். அவருடைய முடிவுகள் சிறு கோபத்தினாலோ, உணர்சிவசத்தினலோ எடுக்கப்பட்டவை அல்ல. நான் மட்டும் இப்படி இருக்கிறேனா இல்லை அப்பாவும் மகனாக இருந்த பொழுது இப்படிதான் இருந்தாரா?

அப்பாவுக்கு சர்க்கரை அதிகமாகி மூன்று நாட்கள் தாங்கினால் அதிகம் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

'பா..ரர்..தா'
'என்னப்பா?'
'மன்னிச்சுக்கோடா'
'எதுக்குப்பா?'
'எல்லாத்துக்கும்'
'நீ தானப்பா என்ன மன்னிச்சுக்கணும். உன்னைப்பத்தி தப்பா நெனச்சிண்டிருன்தேன். ரொம்ப கஷ்டபடுத்திட்டேன். நீ தன் என்ன மன்னிக்கணும்'

கேட்டாரோ இல்லையோ தெரியவில்லை. உயிர் பிரிந்துவிட்டிருந்தது. என்ன கேட்கிறீர்கள்? அப்பாவின் பெயரா? அப்பா என்பதே ஒரே குணாதிசியம் கொண்ட ஒரு சாராரின் பேர்போலத்தான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?

Sunday 25 December, 2011

முதல் குறும்படம்..

No comments:
ஏறக்குறைய நான்கு மாதங்களாக இவ்வலைப்பூ முடங்கியே கிடந்தது. சுருட்டி உள்ளே வைக்காமல் பாதுகாத்த பிளாக்கருக்கு நன்றி. நான்கு மதங்களில் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய. படம் எடுப்பது எப்படி என்பதை விட, எப்படி எடுக்கக்கூடாது என்பது நிதர்சனமாக தெரிய வந்தது. சினிமா என்பது ஒருவர் மட்டும் செய்துவிடக்கூடிய சாகசம் அல்ல என்பது புரிந்தது. 'திரைக்கதை எழுதுவது எப்படி?', 'Foundations of screenwriting - Syd Field' இரண்டு புத்தகங்களும் மிக மோசமான படைப்பை கொடுத்துவிடாமல் காப்பாற்றின. சினிமாவிற்கு தயார்படுத்திக்கொள்ளுதல் மற்றும் ஒத்திகை எவ்வளவு அவசியமானவை என்பது புரிந்தது. இவை எல்லாவற்றையும் விட, படத்தை வெட்டி, ஒட்டி இசை சேர்க்க எவ்வளவு பொறுமை தேவை என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது. ஆதரவளித்த நபர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. 'ஒவ்வொரு Friendum தேவையா மச்சான்' என படம் எடுத்தாலும் 'ஒவ்வொரு friendum தேவை மச்சான்' என புரிய வைத்தது இப்படம்.

Wednesday 31 August, 2011

சொர்க்கம்,நகரம்..

5 comments:

மதுரை வடக்கு வெளி வீதியின் சாலை பழுத்த வேலை நாளின் உச்ச நேர வாகன வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. 23G திருப்பாலையில் ஏறிய ராஜுவையும், இன்னும் சிலரையும் மதுரை ரயில் நிலையத்தில் உதிர்த்து விட்டு கருமமே கண்ணாக பெரியார் நிலையத்தை நோக்கி இருமிக்கொண்டே நகர்ந்தது. ராஜுவின் பேன்ட் பையிலிருந்து தொடங்கி, ஓருடல், இருதலைகளை கொண்டு ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல இயர் போன் நீண்டு காதில் "மங்காத்தா டா.." என்றது. ராஜூ கைக்கடிகாரத்தை பார்த்தான். 3:30 என காலம் சொல்லாமல் நேரம் மட்டும் சொன்னது. தலையை சரி செய்தபடி, லக்ஷ்மி விலாசை நோக்கி சாலையின் மறுபுறம் அடைந்தான்.

ராஜூ "ஒரு அல்வா"

கடைக்காரர் "சாப்பிடவா?"

"ஆங்.."

அல்வாவை வாயில் வழுக்கியபடியே, வலது பக்கம் திரும்பினான். கண்ணன் கபேயில் வடையுடன் மாஸ்டரும் வெந்து கொண்டிருந்தார். 'ஜல்ல் .." என்ற சத்தத்துடன் மசால் வடை மாவிலிருந்து வடையாக உருமாறிக்கொண்டிருந்தது. ராஜுவின் முகத்தில் சடாரென வாசனை கலந்த புகை முட்டியது. ஒரே புகை. ஆவி.

புகை மண்டலத்தில் எதிரே வரும் வாகனமே தெரியவில்லை. மிகவும் சமீபம் வந்த பின் ஸ்கெட்ச் டிராயிங் போல் வெளி வட்டம் மட்டும் தெரிகிறது. "இங்க எப்பிடித்தான் ஓட்டுராங்களோ!' வியந்தபடி சீட் பெல்டை சரிசெய்தான் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ராமு. 


டிரைவர் 'என்ன சார் பர்ஸ்ட் டைமா?'


ராமு "ம்.. நீங்க?'


"நான் கோர்ஸ் முடிச்சிட்டேன் சார். மொத அட்டம்ப்டிலயே. போனேன். நான் பாட்டு என் வேல உண்டு, நான் உண்டுனு இருந்தேன். வம்பு தும்பு ஒண்ணுக்கும் போல.  திரும்பி வரவும்,அய்யா 'நீ இங்கயே டிரைவரா இருந்துக்கோ' னு சொல்ட்டாரு. '


'அப்போ இங்கயே பெர்மநன்ட்டா?'


'ஆமா சார். வந்து நாப்பத்தஞ்சு வருஷம் ஆவுது.'


'ஓ...'


சற்று நேரம் பேச்சில்லாமல் நேரம் கடக்கிறது. டிரைவர் மறுபடி நியுட்டன் விதிக்கிணங்கி சமநிலையை கலைத்து,


'நீங்க எப்பிடி சார் நேச்சுரலா? இல்ல ஏதும் அசம்பாவிதமா?'


'போன் பேசிட்டே U போட்டேன். வண்டி கண்ட்ரோல் இல்லாம ரோட்டு நடுவுக்கு போக, ஒரு இன்னோவா, சிக்னல் விட்ட நேரம் வேறயா. முட்டி தூக்கிட்டான். '


'ப்ச்..'


'அம்மா, பொண்டாட்டிலாம் ஒரே ஒப்பாரி. ரொம்ப கஷ்டமாயிடுச்சு.'


'கஷ்டம் தான். இப்போலாம் இந்த மாதிரி கேஸ் தான் நெறைய வருது. அய்யா செம காண்டு. தீர்ப்பு பூராம் நாயி, பன்னி தான்.'




நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலில், டிரைவர் நிரந்தர உறுப்பினர் கார்டை காண்பிக்க, 


ராகவன்
பெர்மிட்: நரகம் மட்டும்
வகை: அமரர் ஊர்தி


காவலாளி சட்டையில் எருமைத்தலை சின்னத்துடன், 'யமா செக்குரிட்டி சர்வீஸ், யக்ஷபுரி, நரகம் - 69' என பொரித்திருக்கிறது.


'சார்ஜ சீட் குடுங்க'


ராமு வெளிர் மஞ்சள் காகிதத்தை நீட்டுகிறான்.


'நேரா போயி மூணாவது ரைட்டு. பெஞ்ச 34. நீங்க நாலாவது ஹியரிங்.'


கார் திரும்ப, சிக்னலில் சிகப்பு பச்சையாகிறது. 


பச்சையிலிருந்து சிகப்பாகிறது பாதசாரிகளுக்கான சிக்னல். இதுவரை முன் வைத்த காலை பின்வைக்காத ராஜூ, சிக்னலுக்கிணங்கி, அதை விட யமனின் அவதாரமான தண்ணீர் லாரிக்கு மரியாதை செய்யும் விதமாக, வைத்த காலை பின் வைக்கிறான். 'சூ..' என வாயால் காற்றை தள்ளி வலது பக்கம் திரும்ப, அதே சமயம் இடது பக்கம் திரும்பும் சுடிதார் சொர்க்கம். ராஜூ மெலிதாக புன்னகைத்தான். சுடிதார் தலையை வலதாக திருப்பி நோகடித்தது. 'இவளுக்கே இந்த ஏத்தமா!' என ராஜூ இடது பக்கம் திரும்ப, அங்கே சுடிதார் அணிந்த கிழ சொர்க்கம் பொக்கை வாய் காட்ட, இம்முறை கம்பீரமாக வலது திரும்பினான் ராஜூ.  ராஜூ திசையிலிருந்து வலது திரும்ப சிக்னல் பச்சை காட்ட, உண்டிவில்லின் கல் போல் பறந்தன வாகனங்கள். ராஜூவும் சாலையின் ஒரு பகுதி கடந்து டிவைடரின் பக்கவட்டில் போய் நின்றான். அவன் முன்னால் இண்டிகா கேப் ஒன்று கடந்தது.

ராமு வந்த இண்டிகா மெல்ல வேகம் குறைந்து, முழுவதும் நின்று கதவு திறக்கிறது. 


'ஆல் த பெஸ்ட் சார்'


'தேங்க்ஸ்'


திருவிழா போல் கூட்டத்தில் ராமு பெஞ்ச 34ஐ தேடி கண்களை உருட்டுகிறான். வலது, இடது. காணும். தலையை தூக்க முப்பத்தி நான்கில், நான்கு சற்று அழிந்து '3L'  போல உருமாறியிருக்கிறது. ராமு தேநீர் கொண்டு கடப்பவரிடம்,


'இதான் 34 ஆ?'


'ஆங். ஹியரிங் ஆரம்பிச்சுடுச்சு போங்க சீக்கிரம்'


'ஓ.. தேங்க்ஸ்.'


'இருக்கட்டும்'


ராமு வேகமாக நுழைகிறான். நீதிபதி கருப்பு நிற அங்கியுடன் கீழே குனிந்து வாசித்துக்கொண்டிருக்கிறார். நிமிர்ந்து அழைக்கிறார்.


'பசுபதி'


'அய்யா' இரண்டாம் வரிசையில் இருந்து ஒருவர் எழுந்து நிற்கிறார். 


'கூண்டுக்கு வாங்க'


வெள்ளை வேட்டி, சட்டையில், கிட்ட தட்ட தலை இன்னும் சில வருடங்களில் பட்டா போட்டு விற்கப்பட்டுவிடும் நிலையில், ஓட்டமும் நடையுமாக வந்து கூண்டில் ஏறி நிற்கிறார். 


'எப்புடி வந்தீங்க இங்க?'


'காருலங்கய்யா..'


'டிரைவர் ஏதும் பேசுனாரா?'


'ஹ்ம்ம்..'


'என்ன சொன்னாரு?'


'இங்கயே இருக்கறதா சொன்னாரு. இறங்கும்போது சிரிச்சாரு'


'ஏன் இங்கயே இருக்காரு?'


பசுபதி முழிக்க, நீதிபதி தொடர்கிறார்.


'ஏன்னா இருக்கற காலத்துல உண்மையா, நேர்மையா இருந்தாரு. இங்க வந்தாரு. முப்பது வருசமா இருக்காரு. இன்னும் பத்து பதினஞ்சு வருசத்துல சொர்கத்துக்கு மாத்துனாலும் மாத்துவாங்க. உங்களுக்கு அந்த ஆச இல்லையா? திரும்ப திரும்ப கஷ்டப்படுனுமா?'


'இருக்குங்கய்யா.'


'அப்புறம் ஏன் குமார வெட்டுனீங்க? அவங்க பங்காளிங்க உங்கள கொன்னுட்டாங்க'


'என் நெலத்த அவன் பேர்ல மாத்திக்கிடாங்கய்யா..'


'கேஸ் போடுங்க. அதுக்காக வெட்டுறதா?'


பசுபதி தலை குனிகிறார். 


'அடுத்த ஜென்மம் நாயா குடுக்கவா? இல்ல ஒழுங்காருப்பேன்னு சொல்லுங்க சென்னைல போடுறேன். என்ன இருப்பீங்களா?'


'இருப்பேங்கய்யா'


'குட். நாளைக்கு மதியம் ரெண்டு இருபதுக்கு பொறக்க போறீங்க.  பிரம்மா ஆபீஸ்ல போயி பெர்த் சர்டிபிகேட் வாங்கிக்குங்க. போங்க.'


'நன்றிங்கய்யா'


'ஹ்ம்ம்..'


நீதிபதி பிறப்புத்தரவில் கையெழுத்திட்டு விட்டு அடுத்த காகிதத்துடன், 'ராமு?'


ராமு எழுந்து கூண்டில் போய் நிற்கிறான்.


'இங்கல்லாம் ஒழுங்கா நடந்து வரீங்க.  அங்க என்னடானா எப்போவும் தலைய சாச்சிக்கிட்டு போன் தான். சாப்டும்போது, நடக்கும்போது, ஏன் பாத்ரூம்ல கூட. வண்டி ஓட்டும்போது கூட அப்புடி என்ன பேச்சு?'


'என் பொண்டாட்டியோட..'


'அதான் வீட்டுலயே இருக்காங்களே போயி பேச வேண்டியதான? சரி பசுபதி கத தான். நாயா? மனுசனா?'


'மனுஷன் சார். இந்த தடவ கிளீனா இருப்பேன்.'


'அடுத்த தரம் இப்புடி வந்தீங்கனா கண்டிப்பா பன்னி தான். ஏற்கனவே பன்னிங்க கம்மியா இருக்குனு மேலிடத்துலேந்து ஒரே பிரசர். நாளைக்கு ரெண்டு இருபத்தொன்னுக்கு, மதுரைல'


'பேரு சார்?'


'ராஜூ'

'ராஜூ.. ராஜூ.. ராஜூ..' அம்மாவின் குரல், பெயர்வைத்தபோது, காதில் கேட்ட குரல். ராஜூவின் காதில் எதிரொலித்தது. கர்ண கொடூரமாக இன்னோவாவின் ஹாரன் சத்தம் ராஜூவை பூமிக்கு திருப்பியது. ராஜூவை கிட்ட தட்ட நரகத்திற்கு திருப்பி அனுப்பிவிட பிரயத்தனப்பட்டு, டயர் திருகி, ரோட்டை தேய்த்து நின்றது.

டிரைவர் 'யோவ்.. செவுடாயா நீ..'

'சாரிங்க..'

'பூரி.. காதுல மாட்டிருக்கரத கழட்டி ஏறி.. புண்ணியமா போகும்..'

ராஜூ மொபைலை ஒரு முறை பார்த்துவிட்டு, இயர் போனை கழட்டி, தன பின் பையில் வைத்து விட்டு, தலையை ஒரு உலுக்கு உலுக்கி, நிமிர்ந்தான். பாதசாரிகளுக்கான சிக்னல் சிகப்பிலிருந்து பச்சை ஆனது.

சிக்னல் பச்சையிலிருந்து சசிகப்பானது. ராஜூ/ராமு திரும்பி பின்னால் அமர்ந்திருப்பவரிடம் 'என்ன சார் பர்ஸ்ட் டைமா?'

Sunday 31 July, 2011

"an" Issue..

5 comments:
"an" issue.. - ஆங்கில தலைப்பில் ஒரு தமிழ் வலைப்பூ. எப்பொழுதும் பலருக்கு 'a' எங்கே பயன்படுத்துவது, 'an' எங்கே பயன்படுத்துவது என்ற குழப்பம் இருக்கும். இருக்கிறது. எல்லா இடத்திற்கும் 'an' பயன்படுத்துபவர்களையும் பார்த்திருக்கிறேன். என் அக்கா மகள் 'a honest man' என எழுதியதற்கு அவளின் வகுப்பு ஆசிரியை தவறு எனக்கூறி 'an honest man" என திருத்தி இருக்கிறார். "ஏன் மிஸ் தப்பு" என கேட்டதிற்கு, விளக்கம் தராமல், "அது அப்படித்தான்" எனக்கூறி திருப்பி அனுப்பியிருக்கிறார். எனக்கும் "an honest man" சரி என்பது தெரிந்தாலும், ஒரு திட்ட வட்டமான வரைமுறை புலப்படவில்லை. யோசித்துக்கொண்டே இருந்த பொழுது, தமிழ் மூலம் தீர்வு கிடைத்தது. அது சரி என நினைக்கிறேன். தவறெனில், திருத்தவும். 'an' பயன்படுத்துவதற்கு வார்த்தையின் தொடக்கம் 'a e i o u' வாக இருந்தால் மட்டும் போதாது. அது ஏற்கனவே தெரியும். வார்த்தையின் ஒலியின் மூலம் தீர்மானிக்க வேண்டும். அப்பொழுது தான் எந்த ஒலிகளெல்லாம் இதில் அடங்கும் என்பதில் குழப்பம். தமிழில் அதற்கு இணையான 'ஓர்' எங்கே பயன்படுகிறது என யோசிக்க, கிடைத்தது தீர்வு. அனைத்து உயிரெழுத்துக்களுக்கு முன்னும் 'ஓர்' பயன்படுத்துவோம். அதையே ஆங்கிலத்திற்கும் பயன்படுத்துவோம். வார்த்தையின் ஆரம்ப ஒலி, 'அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ' எனில் 'an' பயன்படுத்துங்கள். 'a e i ou' வில் ஆரம்பிக்காத சில உதாரணங்கள். 'An MLA', 'an honest man'. 'a e i o u' வில் ஆரம்பிக்கும் 'an' பயன்படுத்தக்கூடாத உதாரணங்கள். 'a university', 'a user', இதற்கு ஒரே ஒரு அடிப்படை தேவை, தமிழ், உயிர் மெய் எழுத்துக்கள் தெரிய வேண்டும். பல குழந்தைகளுக்கு தெரியவில்லை!

Saturday 23 July, 2011

தெய்வத்திருமகள்..

No comments:
தெய்வத்திருமகள்.. -  "I am sam" இன் சாம் கிருஷ்ணாவாக தமிழ்ப்படுத்தப்பட்டு, படம் தெய்வத்திருமகனாக இருந்து தெய்வத்திருமகளாக திரைக்கு வந்திருக்கிறது. Sean penn இன் உடல்மொழி, நடை உடை, பாவனை ஏன் சிகையலங்காரம் முதற்கொண்டு தமிழில் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை, இங்கு கொஞ்சம் முன் பின் மாறி பயணிக்கிறது. முதல் காட்சியில் கிருஷ்ணா நடுரோட்டில் இறக்கி விடப்பட்டு "நிலா நிலா" என கதறி மயங்குவதிலிருந்து தொடங்குகிறது படம். 

தன பெண்ணின் வாழ்க்கையை கணவனாக கெடுத்த மூளை வளர்ச்சி குன்றிய கிருஷ்ணா, தன பேத்தியின் வாழ்க்கையும் நாசமாக்கிவிடக்கூடாதென நினைத்து, நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறார் அவரின் பணக்கார மாமனார். அதை எதிர்த்து கிருஷ்ணா தரப்பில் வழக்கு பதிவு செய்கிறார் அனுஷ்கா. வழக்கின் முடிவே படத்தின் முடிவு.

விக்ரமும், மகள் நிலாவும் வரும் காட்சிகளும், யாரை யார் வளர்க்கிறார்கள் என்ற அழகான சந்தேகம் ஏற்படும் கனங்களும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. 
குழந்தை கேட்க்கும் அழகான கேள்விகளும், மனநலம் குன்றிய அப்பாவின் பதில்களும் கைதட்டல் பெறுகின்றன. 

இவர்களை தவிர திரைக்கதை என பார்க்கும் பொழுது, விஜய் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார். நிலா எங்கே என கேட்கும் கிருஷ்ணாவிடம், மேலே இருக்கிறாள் என அனுஷ்கா கூறும் காட்சி, எந்த வகையிலும் படத்திற்கு சம்பந்தம் உள்ளது போல் தெரியவில்லை. ஆங்கிலத்தில் அழகாக எடுக்கப்பட்ட வழக்குரை மன்ற காட்சிகள், தமிழில், விகரமன் படத்தில் வருவது போல் ஒரே பாடலில் சிக்கி தவிக்கின்றன. 

படத்தின் இடைவெளியில், என்னை கடந்து சென்றவர் சொன்னார், "பர்ஸ்ட் half   காமெடி செகண்ட் half செண்டிமெண்ட் மாப்ள". இவர்களையும் சமாளிக்க வேண்டுமெனில், "I am sam" ஐ இப்படி தான் எடுக்க முடியும் தமிழில்!

Thursday 21 July, 2011

திரைக்கதை எழுதுவது எப்படி..

2 comments:
திரைக்கதை எழுதுவது எப்படி.. - சத்தியமாக நன் சொல்லப்போவதில்லை. அமரர் சுஜாதாவின் பன்முகத்தில் சினிமாவைப்பற்றிய அவரின் புரிதலையும், எதையும் ஒரு நேர்த்தியுடனும், நவீனத்தனத்துடனும் அணுகும் அவரது லாவகத்தையும் எடுத்துரைக்கும் மற்றுமொறு படைப்பு. அதை படித்த பின் எனக்கு ஏற்பட்ட வியப்பை இங்கு பகிர்ந்து கொள்ள போகிறேன். 

பல நாட்களாக இணையம் இணக்கமாகததால் படித்த மறுநொடியே தோன்றிய எண்ணம் இப்பொழுது தான் நனவாகிறது. திரைக்கதை என்பதை நம் இயக்குனர்கள் (இங்கேது தனியாக திரைக்கதையாளர்கள்!) எவ்வளவு தூரம் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என காட்டுகிறார். திரைக்கதை என்பது எவ்வளவு சுருக்கமாக, நுணுக்கமாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார்.

வசனம் மட்டும் திரைக்கதை அல்ல. அதை வெளிப்படுத்தும் விதம், நேரம், காலம், இடம் அனைத்தையும் விவரிப்பதே திரைக்கதை என்பதையும், காமிரா கோணத்தையும், நடிகர்களின் ஆடை வடிவமைப்பும் திரைக்கதையாளனின் வேலை இல்லை என்பதினையும் தெளிவு படுத்துகிறார். 

சுருக்கமாக சொல்ல, நூற்றிருபது பக்கங்கள் எழுதுங்கள், முப்பது பக்கங்கள் முன் கதை, அடுத்த அறுபது பக்கங்கள் அதன் விளைவுகள், கடைசி முப்பது பக்கங்களில் முடிவை நோக்கிய பயணம். அனைத்து இயக்குனர்களும் இவரை பின்பற்றி விட்டால் தோல்வியே இருக்காது என சொல்லமுடியாவிட்டாலும், தோல்விகள் குறையும். நான்  பின்பற்ற போகிறேன். :)

Sunday 12 June, 2011

ஆரண்ய காண்டம்..

2 comments:
ஆரண்ய காண்டம்.. - பல ரௌடிகள், ஒரு சப்பை, ஒரு அப்பாவியும் அவரை அப்பாவாக கொண்ட பையனும், ஒரு வப்பாட்டியும் ஒரே நாளில் தங்கள் வாழ்நாளின் முக்கிய திருப்பத்தை சந்திக்கிறார்கள். இதை ஒரு நாவல் போல் லாவகமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. 

முதல் படமாக இதை தெரிவு செய்ததற்கும், இப்படத்தை தயாரித்த சரணுக்கும் பாராட்டுக்கள். பல விதமான கதாப்பத்திரங்களை உலவ விட்டு, அவர்களை ஒரு சிறு புள்ளியில் இணைத்து, அதன் மூலம் ஏற்படும் திருப்பத்தை மிகையில்லாமல், இயல்பு மாறாமல், சரியான முறையில் கொடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் பளிச்சிடும் வசனங்கள். படத்தில் புரியாத ஒரே விஷயம் எதற்காக ஜாக்கி சேராப் நிர்வாணமாக ஒரு காட்சியில் உலா வருகிறார் என்பது தான்.

படத்தை படத்தில் வரும் மூன்று வசனங்களில் விளக்கி விடலாம்.

"அப்பா நா ரொம்ப புடிக்குமா?"

"அப்டியில்ல... ஆனா அவரு எங்கப்பா.."



"என்னைய பொறுத்த வரைக்கும் சப்பை கூட ஆம்பளதான்.."
"எல்லா ஆம்ப்ளைங்களுமே சப்ப தான்.."


"What's great about being a woman?.. Because it's a men's world"

இதுவரை தமிழில் இதுபோன்றதொரு படத்தை பார்த்ததில்லை என சொல்லமுடியவிடினும், இப்படியும் ஒரு படம் தமிழில் வருகிறது என பெருமிதம் கொள்ளலாம். 

Sunday 5 June, 2011

வெண்பா..

1 comment:
வெண்பா.. - "ஈஸியா எழுதலாம் வெண்பா" என்ற புத்தகத்தை படித்ததின் தாக்கம் தான் இவ்வலைப்பூ. பதினோராம் வகுப்பு முதல் சமஸ்கிருதம் முதல் மொழி ஆகிப்போனதால் விட்டுப்போன தமிழ் இலக்கணத்தை எனக்கு மறுஅறிமுகம் செய்த புத்தகம். புத்தகத்தை எழுதிய இலவசக்கொத்தனாருக்கும் (புனைப்பெயர்!), என் அண்ணனுக்கும் நன்றிகள். 

தேமாவும், புளிமாவும் புரியாத புதிராகவே இருக்கும் மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற புத்தகம். சினிமா மூலம் வெண்பாவை எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஏற்கனவே வெண்பா இலக்கியம் அறிமுகமானவர்களுக்கு, இந்நூலில் விளக்கியிருக்கும் விதம் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும்,  புதிதாக படிப்பவர்களுக்கு வரப்பிரசாதம்.  வெண்பா விளக்கப்பட்டுள்ள விதம் இது தான். 

சீர்களை பின்வருமாறு பெயரிட்டுக்கொள்வோம்.
நேர் நேர் - சூர்/யா, நிரை நேர் - வடி/வேல், நேர் நிரை - ஜோ/திகா, நிரை நிரை - ரக/சியா 

நேர் நேர் நேர் - ஐஸ்/வர்/யா, நிரை நேர் நேர் - நயந்/தா/ரா
நேர் நிரை நேர் - மா/ளவி/கா, நிரை நிரை நேர் - ஜெய/லலி/தா

வெண்பா எழுதும் விதிகள் இவை தான்:

1. வெண்பா இரண்டு வரி முதல் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

2. கடைசி வரியில் மூன்று வார்த்தைகளும் மற்ற அனைத்து வரிகளிலும் நான்கு வார்த்தைகளும் இருக்க வேண்டும்.

3. மேலே குறிப்பிட்ட அசைகள் படி, பெண்களுக்கு பின்னால் ஆண்கள் வரக்கூடாது.

4. கடைசி வார்த்தை ஒரே அசையாகவோ, 'உ' என்ற ஓசை கொண்டோ முடிய வேண்டும்.

5. எதுகை மோனை வேண்டும்.

மேலே சொன்னவை மேலோட்டமாக நான் சொன்ன விதிகள். இவற்றை எவ்வளவு சுலபமாக நினைவில் கொள்வது, எவ்வாறு பயன்படுத்துவது என ஒரு கதை போல எளிமையாக விளக்குகிறார் இலவச கொத்தனார். படித்ததன் பலனாக கீழே ஒன்று

வலையோடு நில்லாமல் வக்கனை பேசாமல்      
விலைகொடுத்துப் படித்துப் பார்!

Monday 30 May, 2011

Rajni - A human being..

No comments:
Rajni - A human being.. - After Rajni has fallen sick, there have been many unnecessary activities carried out by his fans or whoever it is. I am reading somebody commited suicide since Rajni is sick, though am not sure what the real motive was. After all these, I hear people saying "Why all these non sense for a cinema actor? Why do we care? What has he done for this society?". Some even say "Why do you guys bother even if he dies?"

I understand all the nonsenses that are happening are nonsenses. But "Why do we care?". Because he's a human being. Like us. With flesh and blood. We are sentimental. We cry when somebody dies. But that's the way it is.

When we see in T.V. that some where near Atlantic ocean, a flight crashed, we feel sorry for that. When we see somebody with a kid in hand in the bus, we give our seat for the to sit. When Rajnikanth is sick and everybody is showing interest on how his health is, why do we wonder! Why do we need to criticise! Again I say, He's also a human being.

If people pray for him, let them pray. If their prayer is blessed, it has saved a human's life.A family's happiness. A society's happiness. Let him live long. I will pray for it. 

Sunday 29 May, 2011

The Hangover Part II..

1 comment:
The Hangover Part II.. - The Wolfpack is back.. This time in Bangkok.. Hangover II is Hangover happening in Bangkok instead of Las Vegas. Same Stu, same Phil, same Alan but this time in Bangkok with their old friend Chow. 


Stu's wedding in Bangkok as his girlfriend is from Thailand. Atlast, with the compulsion from everyone, Alan is also invited for the wedding. In the airport itself, Alan doesn't like Teddy (Stu's girlfriend's brother) joining the Wolfpack. There starts the game and asusal they forget what happens during the previous night of wedding. They lose Teddy. How they find him back and what happened when they were hung over. Bangkok has it.


Similar story, similar screenplay, similar cast (of course). But still it was reasonably funny and worth the money I paid. Not only the sequences were funny but the dialogues too. Alan's characterization again brings out lots of Laugh Out Loud moments. There's nothing much to write review on this movie. But if you liked Hangover in Vegas, you would definitely like the Bangkok version. Bangkok has them now!

Saturday 28 May, 2011

Kung fu Panda 2..

1 comment:
Kung fu Panda 2.. - Who is PO? What's bothering his inner peace? That's it. That's the movie. Looks small and not so interesting? Dream Works makes it interesting. This time with the "Now so common" 3D experience. Po, the dragon fighter and his team of five are back, this time with a huge target of saving China and the martial art Kung Fu from the peacock king "Shen".

Peacock king "Shen" creates a mammooth, metal spitting, "I don't know how to name it" kind of a special weapon. He tries to conquer China and to destroy Kung fu. The only person who can stop him from dong this is none other than the Dragon warrior Mr.Po. Does he stop him? Enjoy it with the 3D experience.

The story being simple, the movie is bing made special by the characterization of each character and the naturally comedy tinted dialogues. Po, does all the stuffs that Vijayakanth do. From stopping the bullet spitted towards him to reverting it to the same person it came from. But what makes him special is that he does it with the style of Rajnikanth. With the fun and the depth you are pulled into that character, it makes you feel it real.

You want to find your inner peace in 3D? See Kung fu Panda...

காதல் மதம்..

1 comment:
காதல் மதம்.. - காதலுக்கு கண்ணில்லை. மொழியில்லை. இனம் இல்லை. அனால் மதம் மட்டும் உள்ளதாகவே தோன்றுகிறது. காதல் எனும் தனி மதம் அல்ல. காதலிப்பவர்களின் மதம். பெரும்பாலும் ஆண்களின். சில சமயம் பெண்களின். உயிருக்கு உயிராக காதலிக்கிறோம் என்பவர் கூட இவ்விதியிலிருந்து பெரும்பாலும் தப்புவதில்லை. எனக்கு தெரிந்து மூன்று காதல் திருமணங்கள் மதம் மாறிய பிறகே நடந்திருக்கின்றன. 

இரு திருமணங்கள், காதலிக்கும் பெண் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிறகே நடந்தன. ஒரு கல்யாணம், காதலித்த ஆண், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பிறகு நடந்தது. காதலித்த பொழுது யாரும் இதை யோசித்ததாக தெரியவில்லை. கல்யாணம் வரும் பொழுது, மதம் பெரும் பூதமாக உருவெடுக்கிறது. எதற்காக ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறி காதலித்த பெண்ணை/ஆணை மணக்க வேண்டும். 

1. கல்யாணத்திற்கு பிறகு ஒரு குடும்பம் ஏற்கவில்லை என்றாலும், மற்ற குடும்பமாவது தன்னை அரவணைக்கட்டும் என்ற நினைப்பாக இருக்கலாம்.

2. பிறந்த பிறகு குழந்தையின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்படும்  என்ற எண்ணமாக இருக்கலாம். 

3. தன் துணைக்காக விட்டு கொடுக்கும் மனப்போக்காக இருக்கலாம். 

ஏதாக இருப்பினும், கட்டாயப்படுத்தி மதம் மாற்றி மணம் செய்து கொள்வது, ஒருவரின் சொந்த விருப்பு வெறுப்புகளை முடக்கி, அவரை ஆயுள் சிறையில் அடைப்பது போன்று உள்ளது. கமல் ஹாசன் போல் நாம் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் மதம் என்ற இடத்தை வெற்றிடமாக விட முடியாது. அதற்கான தைரியமும் நமக்கு கிடையாது. கட்டாய மத மாற்றத்தை இருவரும் மேற்கொண்டு காதல் மதம் புலம் பெயர்ந்து, மத யானைகளின் மதத்தை அடக்குவதே நம்மால் முடிந்த செயல். அதை செவ்வனே செய்வோம்..

Saturday 21 May, 2011

Pirates of the Carribean - On Stranger tides..

3 comments:
Pirates of the Carribean - On Stranger tides.. - I saw all the three prequels together on the same day this year. Regretted how did I miss Jack Sparrow these many years. So when announcement came the fourth part is coming May 20, I decided am gonna see it in the big screen. This time double delight with 3D..


Booked in PVR and summoned there at the right time. They delayed half an hour and started the movie by 2 P.M. Fun started when Jack Sparrows was summoned in court but when they removed the cuff it was Gibbs. The story is nothing but seeking the "Fountain of youth" and collecting the needed to achieve that. Barbossa, Black beard along with Jack and Angelica (Jack's old time girlfriend :)) and a Spanish crew. Who got the "Fountain of youth" and how frames the story.


As usual Jack Sparrow was adorable with obvious wit and charm. Penelope cruz, being in the first time in a Pirates venture, did her job as a beauty doll (bit older beauty, tamil la muthirkanni). Everybody else did their part well enough. But still it is not enough for the audience.


Being the fourth and the 3D version of the Pirates sequels, expectations being so high, it is possible that the film may miserably fail and there were lots of examples for that. Pirates didn't fail miserably but is a bit disappointing. Story line really being a thin line and a somewhat weak screenplay makes the movie quite boring. For those who haven't seen the first three parts, it may be more disappointing. For Jack Sparrow and the somewhat ok 3D experience you can see it once in big screen.

Kurippida Thaguntha vasanam (Noteable dialogue):

Angelica: Why is it we can never meet without you pointing something at me? 

தேசிய விருதுகள்..

5 comments:
தேசிய விருதுகள்.. - இம்முறை தேசிய விருதுகளை கட்டோடு அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது தமிழ் சினிமா. ஆச்சரியம் கலந்த சந்தோசம். ஏகப்பட்ட விமர்சனங்கள். காதில் விழுந்த சில கீழே...

"சன் பிக்சர்ஸ் ஏதோ பண்டானுங்க மச்சான். இல்லேன எப்டி ஆறு அடிக்க முடியும்".

"என்னையா ஆடிருக்கான் அந்த பாட்ல.. டான்ஸ் மாஸ்டருக்கு நேசனல் அவார்டாம் நேர கொடும.."

எனக்கு எந்த வியப்பும் இல்லை. வாங்கியவர்கள் அனைவரும் தகுதியானவர்களே. தனுஷிற்கு புதுப்பேட்டை படத்தில் எதிர்பார்த்தேன். என்னவோ தவறி விட்டது. வெற்றிமாறன், முதல் படத்திலயே அனாயசமான இயக்கத்தை கொடுத்து அசத்தியவர். சரண்யா, இவருக்கு எந்த விளக்கங்களும் தேவை இல்லை. 

வருடா வருடம், பிச்சைக்காரனாகவும், வெட்டியானகவும், சகதியில் புரள்பவனாகவும் இருந்து தேசிய விருதை தட்டி செல்லும் கதாநாயகர்களுக்கிடயே, சாதரணமான எந்த கோளாறும் இல்லாமலும் இயல்பாக நடித்து விருது பெறலாம் என தனுஷ் நிரூபித்திருக்கிறார். 

தனுஷ் சன் பிக்சர்ஸ் படத்தில் நடித்ததினாலோ, ரஜினியின் மருமகன் என்பதாலோ இவ்விருதினை பெறவில்லை. அப்படியே மற்ற அனைவரும். தமிழர்கள் வளர்வதை பார்த்து சந்தோசப்படுவோம், சந்தேகிக்க வேண்டாம்.

Sunday 15 May, 2011

அழகர்சாமியின் குதிரை..

4 comments:
அழகர்சாமியின் குதிரை.. - முதல் முறையாக தேவியில், அதிகம் செலவழித்து பார்த்தேன். இரண்டு அழகர்சாமிகள், இரண்டு குதிரைகள். ஒருவர் சாமி, மற்றொருவர் ஆசாமி. இருவரின் குதிரையும் தொலைகின்றன. ஆசாமியின் குதிரை சாமியின் குதிரை ஆகிறது. ஆசாமி என்ன ஆனார். குதிரை திரும்ப கிடைத்ததா? இதை வைத்து கதை சொல்ல மெனக்கிட்டிருக்கிறார் சுசீந்திரன். 

வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்தத்திற்கு, சுச்சென்றநிர்க்கு ஒரு சபாஷ். அனால் சினிமா என்பது கருக்கதை மட்டும் அல்ல. அதை எப்படி சொல்கிறோம் என்ற கதை சொல்லும் கலையும் சேர்ந்தது என்பதை முந்தைய இரண்டு படங்களில் நன்கு புரிந்து வைத்திருந்த இயக்குனர் இப்படத்தில் அந்த இடத்தில் சொதப்பியிருக்கிறார். ஒரு இடத்தில் நன்றாக இருப்பது போல் தோன்றும் கதையின் போக்கு, மறு நிமிடமே நொடிக்கிறது.

நகைச்சுவையும் பெரிதாக எடுபட்டது போல் தெரியவில்லை. அங்கு அங்கு சிரிக்க சில வசனங்கள் இருந்தாலும், "Laugh Out Loud" moments இல்லை எனவே சொல்ல வேண்டும். மூட நம்பிக்கைகளை சாடுகிறார், சாமியார்களை கிண்டல் செய்கிறார், தவிர படத்தில் கவினிக்க வேண்டிய விஷயங்களை பார்க்க முடியவில்லை.

இது நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என கேள்விப்பட்டேன். அப்படியெனில் சுசீந்த்ரனும்  அம்முயற்சியில் தோற்றிருக்கிறார். 

Sunday 1 May, 2011

வானம்..

2 comments:
வானம்.. - கவனத்தை ஈர்க்கிறது.. சிம்பு இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். பரத் முதலில் அற்புதமாக நடிப்பது போல் இருந்து கடைசியில் புஸ் ஆகிறார். அனுஷ்கா இடஞ்சுட்டி பொருள் விளக்குகிறார், சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். பிரகாஷ் ராஜ் சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார், சில சமயம், அத நான் சொல்ல கூடாது. தியேட்டரில் வரும் எல்லா காட்சிகளிலும் கை தட்டல் பெரும் ஒரே ஆசாமி சந்தானம் தான். "பாஸ் என்கிற பாஸ்கரன்" க்கு பிறகு நல்ல நகைச்சுவை. சிம்புவின் தனி ஆவர்த்தனையை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். தனியாக குறிப்பிடப்பட வேண்டியவர் சரண்யா. அவர் சோகமாக இருக்கும் காட்சிகளில் என்னால் அசட்டை செய்ய முடியவில்லை. அவருடன் வரும் பெரியவரை யாரவது துன்புறுத்தினால் "விடுங்கடா வி.ம களா" என கத்த தோன்றுகிறது. சரண்யாவிற்கு அறுவை சிகச்சை நடக்கும் இடத்தை கூட "Vascular Surgery ward" என இனம் பிரித்ததற்கு இயக்குனர் கிருஷ்க்கு ஒரு சொட்டு. இதை தவிர பரத் கூட்டணி ராஜஸ்தான் வழியாக சென்னை வருவதும், சிம்பு இறந்தவுடன் (கிளைமாக்ஸ் சொன்னதிற்கு மன்னிக்கவும்) "கேபிள் ராஜா வாழ்க" என கோஷமிடுவதும், கடைசியில் வரும் சில காட்சிகளும் உட்டாலக்கடி Cliche க்கள். அனுஷ்கா வரும் பல காட்சிகளை ரீமேக் செய்ய பணம் இல்லையோ என்னமோ, வாய்கள் தெலுங்கும், சத்தம் தமிழிலும் வருகிறது. Malena, Babel வகையில் ஒரு படம் தர முயற்சித்திருக்கிறார். வானம் வானம் தொடவில்லை, அனால் பாதளம் செல்ல வில்லை. திரிசங்கு சொர்க்கம். 

Sunday 24 April, 2011

கோ..

1 comment:
கோ.. - வெள்ளிக்கிழமை செல்வதாக நினைத்து சனிக்கிழமை ரிசர்வ் செய்து, "இந்த படத்துக்கு, அதுவும் ஒன்பதே முக்கால் ஷோவுக்கு இவ்ளோ கூட்டமா??" என வியந்து, "டைட்டில் லேந்து பாத்துரணும்" என முண்டியடித்து போய்  உட்கார்ந்தோம். எழுத்து வித்தியாசமாக போடப்பட்டது. ஜீவா வை விட, கார்த்திகாவுக்கும், பியாவுக்கும் கைதட்டல் நிறைய கிடைத்தது. 

முதல் காட்சியிலயே பறந்து பறந்து போட்டோ எடுத்து, குற்றவாளிகளை பிடிக்கும், சமூக சேவக ஜீவா அறிமுகம். பின் கார்த்திகா, பியா அறிமுகங்கள். சில பல ஆபாச, இரட்டை அர்த்த வசனங்கள். பிறகு கதை சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கம். அஜ்மலை வைத்து ஒரு வழியாக கதை என்ற வஸ்துவை ஆரம்பித்து, பிரகாஷ்ராஜ் ஒரு காட்சியில் ஸ்கோர் செய்து, பியா பாவமாக செத்து மடிய, இடைவேளை.பின்பாதியில் ட்விஸ்ட் என்கிற பெயரில் பல வித்தைகள் செய்து படத்தை ஒரு வழியாக முடிக்கிறார் ஆனந்த. 

ஆனந்த என்றாலே ஆபாசமாகவும், இரட்டை அர்த்தமாகவும் வசங்கள் கட்டாயமா என்ன? படத்திலயே அப்படி என்றால், திரைஅரங்கில் அதற்கு வரும் கவுண்டர்களுக்கு கேட்கவே வேண்டாம். திருப்பத்தை மட்டுமே நம்பி மற்ற அனைத்தையும் கோட்டை விட்டிருக்கிறார் ஆனந்த.

Sunday 10 April, 2011

Real life inception..

6 comments:
Real life inception.. - I was walking with my mom.. She was unable to walk. Steps were too steepy. Already she got knee pain. It was getting severe. So I started walking, taking her in my arms. Two steps up. My mom disappeared. I was really stunned. Searched to and fro. Couldn't find anywhere. Started crying big time. Still no trace.


My mom woke me up. "Go brush your teeth". I was stunned to see her normal. That too we were climbing no steps. She screamed " What you are pale like you have seen a ghost. Go brush and come. Dosa is hot." I started telling my mom What I was experiencing. She laughed and said "You must be dreaming".


Cell phone beeped. Got angry that somebody is messaging at early morning 8 o clock :). Tiredly browsed my inbox. My sister "Hari is not here. Who will book tickets for you?". I jumped out of the bed, booted my brother's lap top, tried logging in https:\\irctc.co.in. Asusual "Service Unavailable". I tried tatkal ticket for 12th night form Madurai to Chennai. Tried hard. When service was available. 112 were already waitlisted. This is nio dream!!!

Tuesday 5 April, 2011

இடைத்தரகம்..

No comments:
இடைத்தரகம்.. - இடைத்தரகம், ஆங்கிலத்தில் புரோக்கரேஜ். எனக்கு தெரிந்து நம்மில் பலர் உபயோகிக்கத்தயங்காத ஊழல் இது. வீடு பிடிப்பது, நிலம் பதிவது, ஓட்டுனர் உரிமம் வாங்குவது, திருமணம் பதிவு செய்வது (குறிப்பாக காதல் திருமணம்), எல்லாவற்றிற்கும் காரணம் சோம்பேறித்தனம், அறியாமை மற்றும் நம் அரசின் கடினமான, குழப்பமான ஆனால் சரியான வழிமுறைகள். சமீபத்தில் நிலம் பதிவு செய்ய பதிவு அலுவலகம் சென்றிருந்தேன். அப்பாவுடன். எனக்கு நிலத்தை விற்பவர் ஒருவர், வாங்கி வீட்டை கட்டி தருபவர் ஒருவர், பதிவு பத்திரம் தயார் செய்தவர் ஒருவர்.

பத்திரத்தில் இங்க ஒரு கையெழுத்து, அப்றோம் இங்க ஒன்னு, என வடிவேலு போல் கையெழுத்து வாங்கினர். பதினைந்து நிமிடங்களில் பதிவரை பார்த்து குசலம் விசாரித்து விட்டு, கட்டை விரலை அழுத்தி விட்டு, வீட்டு பத்திரத்தை வங்கிக்கடனுக்கு வைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இதே நானும், விற்பவரும் அங்கே சென்று வேலையை ஆரம்பித்து இருந்தால் லாஸ் ஆப் பேயில் தான் பதிவு நடந்திருக்கும். காரணம் நமக்கு அதில் பழக்கம் இல்லாமை. அதற்காகவே இருப்பவர்கள், நன்கு தெரிந்தவர்கள் செய்தால், எங்கு என்ன பதிவும் எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என அனைத்தும் தெரியும். 

என் ஓட்டுனர் உரிமத்துக்கும் கையெழுத்தும், திருமங்கலம் ரோட்டில் ஓட்டிய கால் கிலோமீட்டர் பயணமும் தான் நானாக செய்தவை. இடைத்தரகம் ஒருவகையில் சௌகரியமாக இருந்தாலும், போலிகளினால் பயங்கர விளைவை உருவாக்கக்கூடியவை. 

இனிமேல் இடைத்தரகம் இருந்தாலும் நானும் அதன் வழிமுறைகளை அறிந்து கொண்டு செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன். பாப்போம்..

Sunday 3 April, 2011

Kulla nari koottam..

No comments:
Kulla nari koottam.. - My brother has downloaded the copy of this movie and have been trying hard to see that movie the same night. Literally not interested with the cast and everything, I started seeing this movie so that it helps as a catalyst to induce sleep (paakum bothu 12 maninga..). But it turned out to be different and made me to get into it and I finally finished it full.


The story looks like its inspired from "Boss Alias Baskaran". Whoever not interested in that sort of movies, please don't see. Hero as usual is a vetti officer and roams around Madurai. Accidentally he recharges 1500 rupees for a number instead of his father's. As you have guessed it's the heroine's number and in sometime "Start music". 


Heroines father wants hero to become a police official to marry his daughter. Hero's father literally hates Policemen. Rest of the story forms how it turned out to be. The movie was a decent entertainer and made me felt bad for not seeing this one in Theatre. For seeing Ravan, Singam in theatres, I felt ashamed for not seeing this one. If you wish to see, please do see in a theatre..

Tuesday 15 March, 2011

"அப்பா"வி ..

2 comments:
"அப்பா இங்க ஒரு புக்கும், சி.டி. யும் வச்சுருந்தாரமே பாத்தியா டா.." அம்மா வினவினாள்.

"அப்பா இல்லை இனிமேல் அப்பன்" - சொல்ல நினைத்தான் சரவணன். மரியாதையை தானே குறைத்துக்கொண்ட ஜீவன். எவ்வளவு ஆசைப்பட்டிருப்பேன் அப்பா போல் ஆக வேண்டுமென. இனிமேல் அது (அவன் குறைந்து அஃறினையாக அது ஆனது) போல் ஆகாமல் போனால் சரி. 

"ரெண்டுமன்நேரமா தேடிட்டு இப்போம் தான் டா வெளிய போயிருக்காரு. வந்து இன்னும் கெடைக்கலயானு கத்துவாரு டா.. கொஞ்சம் தேடேன்.." கெஞ்சிக்கொண்டே அடுக்களையில் தேட சென்றாள் அம்மா. 

கோபம். அது ஒன்று தான் குறைச்சல். இந்த மானம் கெட்ட ஜீவனுக்கு அது வேறு வருமா? பார்க்கலாம். 

"அவரு என்ன சின்ன பையனாடா? எங்கயாவது மறதில வச்சுருப்பார். கொஞ்சம் தேடேன்.."

அதையே தான் நானும் கேட்கிறேன். சின்ன வயசா இது போன்ற செயலை செய்ய. அதுவும் வீட்டிலயே. அந்த கருமத்தை இவள் வேறு ஓயாது தேடி கொண்டிருக்கிறாள். 

வெளியே அப்பாவின் வண்டி சத்தம் கேட்டது. வந்து ஏதாவது கேட்கட்டும் வைத்துக்கொள்கிறேன். 

"என்னடி கெடச்சுச்சா?" கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் அப்பா.

"இல்லையே! எங்க வச்சிங்கனு ஞாபகம் இருக்கா?" அம்மா.
"அது தெரிஞ்சா எடுத்திருக்க மாட்டேன். உன்ன போயி கேட்டேன் பாரு. தள்ளு..."
"ஏண்டா தேடு தேடு னு எத்தன நேரமா சொல்லிட்டிருக்கேன். " அம்மா சரவணனை ஏசினாள்.
"அறிவு கெட்டவளே. அவன் கிட்ட கேக்காத னு சொல்லிட்டு தான போனேன்."

"என் கட்டிலுக்கு அடியில் தான் கெடந்துச்சு எடுத்து அங்க வச்சுருக்கேன். ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டை காட்டினான். 

அப்பாவுக்கு சுருக்கென்றது. சரி எப்படியும் ஒரு நாள் தெரியத்தானே வேண்டும். புத்தகத்தை பிரித்தார். ஒரு அழகி புன்னகையை மட்டுமே ஆடையாக அணிந்த படி நின்று கொண்டிருந்தாள். சி.டி. யிலும் அதே போன்றதொரு குடும்ப படம். சரி இரவு வந்து பதின்மூன்று வயது சரவணனுக்கு விளக்கி கொள்ளலாம் என அவற்றை எடுத்துக்கொண்டு சென்றார், பாலியல் துறை மருத்துவரின் உதவியாளரான "அப்பா"வி.

Thursday 10 March, 2011

இசைத்தமிழ்..

No comments:
இசைத்தமிழ்.. - "இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை" என ஒரு பாடல் உண்டு. இன்று இசைத்தமிழ் உள்ளதா என வியக்கும் வண்ணம் மாறிவிட்டது. திரை இசை மட்டும் இசை இல்லை என்றாலும், அதுவே மக்களை சுலபமாக சென்றடையகூடிய ஒரு ஊடகம். அனால் இன்று திரை இசையில் நல்ல கற்பனை  வளம் மிகுந்த தமிழை காண்பது அரிது. 

"அன்பே உன்னால் என் மனம் பிரீஜிங்.. அடடா காதல் என்றும் அமேசிங்.. எச்கிசே (excuse me அடிக்க முடியவில்லை!!) லெட் மி டெல் யு சம்திங்.. நீ சிரித்தால் இ போன் ட்ரிங் ட்ரிங்.."

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மேற்கண்ட வரிகளில் அழகும் இல்லை, தமிழும் இல்லை. இதற்கான காரணமாக சில விஷயங்கள் தோன்றுகின்றன. 

எத்துனை பேரால் இன்று தமிழ் பாடல்களை சரியாக அர்த்தம் கண்டு கொள்ள முடியும். பேச்சு தமிழ் முதல் சங்கத்தமிழ் வரை எதுவாகினும் அது தமிழாகப்பெரின் புரிந்து கொள்ள கஷ்டமாகவே உள்ளது. உதாரணமாக நறுமுகையே பாடலில் "புரவி" என்றொரு மொழி. அதற்க்கு இணையத்தை துவழாமல் எத்துனை பேரால் அர்த்தம் சொல்ல முடியும்? மிக மிக சாதரணமான வார்த்தைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைவிட வெட்கக்கேடாக தமிழ் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தான் தெளிவாகிறது. 

அடுத்ததாக பாடகர்கள். "காதல் பிச்ச்சாசே.. காதல் பிச்ச்சாசே.. ஏதோ கருமம் பர்ர்ர்வைல்லை.. ". இது தன மிகவும் கேலி செய்யப்பட்ட பாடல். இதைவிட மோசமானவை நிரம்ப உள்ளன. "பூச்சட்டிகள் பூக்கிறதே.." பூச்செட்டி எப்படியடா பூக்கும்? தமிழ் அறிந்த பாடகர்களே உலகில் பிறப்பெடுக்கவில்லை என்பது போன்று எங்கும் எதிலும் உலகமயாக்கல். மற்ற மொழி பாடகர்களை பாட வைக்கலாம் தவறில்லை. தமிழ் கெடாமல் பார்த்து கொள்வது கடமை. 

அற்புதமாக எழுதப்பட்ட பாடல்கள், உச்சரிப்பினால் கெடுவது வேதனையின் உச்ச கட்டம். தூய தமிழ் இல்லாவிடினும் குறைந்த பட்சம் தமிழிலாவது எழுதினால் பாடல்கள் உயிர்ப்புடன் இருக்கும். இந்த வலைப்போவை படிக்கும் அளவுக்கும் தமிழ் தெரிந்திருந்தால் தமிழ் உயிர்ப்புடன் இருப்பதாக நம்புவோம்.

Monday 7 March, 2011

Language..

2 comments:
Language.. - It' s been a long time there was some social content in this blog making this more of a "Movie review" platform. Wanted a change. The thing am going to discuss has been wandering in my mind for a long time. Tamilians could remember a comedy from movie "Thirumalai" (aang antha elavu thalapathi padam thaan). Vivek and Vijay will take diversions countlessly and at last reach Tirupati. The post is not about the movie or tirupati. It's about a dialogue Vivek says.

"Enna da jilebiya picchu potrukanga?". Translating that - That actor criticizes the script of the language by comparing it to Jilebi (a sweet spiral in shape). Everyone of us might have laughed atleast only once at it. Some days back, during dinner, my room mates (all telugu guys) were discussing about routes written in Chennai buses. One guy said it looked like Jilebi to him. Exact same comparison of what's made in the comedy said above.

Both Tamilnadu and Andhra Pradesh reside in India. Still we criticize each others written forms. We, tamilians go one more step and call telugu guys "Gulute (reverse of telugu)". Before writing this blog I saw a video of Kamal Haasan telling English has almost become our national language. At this moment I feel we have two options for National language to make country a better place.

1. English
2. Silence

I prefer the latter..

Sunday 6 March, 2011

The Fighter..

2 comments:
The Fighter.. - Before getting into review, my thanks to Arunachalam alias Dexter for making me go to this movie this weekend. Since I was not so sure about the movie (though Christian Bale got the oscar), I decided "Ok.. let me see what Roger Ebert says". Typed imdb.com and read the review for "The Fighter" by Roger Ebert. Ebert, since being a high level critic and movie reviewer for a long time, and would have seen lots of Boxing movies, gave just 3 out of 5.

With a mixed expectation, I reached theatre 5 mins late. Nothing much missed as we all know, Oscar winning and nominated movies start slow (moving um slow than).In the opening few scenes, David O.Russell (avaru than diretakkar), shows characterizations of family members of Micky Ward (Mark Wahlberg). A wanna-be-worldchampion-but-miserably-failed brother, Dicky(Christian Bale), interested in money and not so caring mother cum manager and a gang of sisters. Mickey is a sincere Boxer, but since his misrupted family runs his career too, he's unable to come up. A sample incident where Dicky makes Micky, a low weight boxer to fight against a medium weighter and makes him bed-ridden.

In a petty theft, Dicky goes to jail. Under these circumstances, being free from all non senses, Mickey, with the help of his Girlfriend and some new trainers, gets along well. Dicky realizes his fault in prison on seeing his documentary portraying him as a boxer turned drug addict. Micky wins an important match with the tricks Dicky taught him when everything else fails. At this time, Dicky gets released, but Micky unable to take him as trainer back due to his agreement with new management. This is more than enough of story and rest should be seen on screen.

Though an English movie, I was able to connect well with small sarcasms and emotions bound across characters. Being real life story, it makes me feel real. I couldn't resist myself getting to the edge of the seat for the last fight (unmayave nalla fight pa.. Akira crane kediyathu, rope kediyathu.. kutthu kutthu kummangutthu than).

Most important thing that amazed me in this movie is Christian Bale's performance. Man! what an acting. Have you seen Bale as a masculine, super hero in Dark Knight. Then you have a treat in this movie. I remember Tom Hanks in "The Philadelphia" when I saw Bale on screen as "Dicky Eklund". If you are a die hard fan of Bale, don't miss this one and regret later. 

Saturday 19 February, 2011

பயணம்.. 45/100

1 comment:
பயணம்.. - 

ஒன் லைன் - பயணம் பணயம் ஆனால் என்னாகும் - உப்பிட்டவரை உள்ளளவுக்கு மேல் நினைக்கும் கதாநாயகன், வில்லனை பழிவாங்குவதே தலையாய கடமையாய் செயல்படும் கதாநாயகன் போன்ற ஒன் லைன்களுக்கு மத்தியில் பழக்கப்படதானாலும் வித்தியாசமான ஒன் லைனை எடுத்ததற்கு - 6/10.

திரைக்கதை - ஒன் லைனை பிடித்து விட்டு திரையில் கோட்டை விட்ட பேராண்மை போல் இல்லாமல், திரைக்கதையிலும் ஓரளவுக்கு முனைப்புடன் செயல்பட்டு, சில இடங்களில் நகைச்சுவையாய் தடுமாறி பின் ஒரு வழியாக தடத்தில் பயணிக்க வைத்ததற்கு - 5/10.

நடிப்பு - நடிப்பில் கொஞ்சம் கோட்டை தான். இயல்பாக வெகு சிலரே. சந்திரகாந்தின் ரசிகர், கடைசியாக சாகும் தீவிரவாதி, "பெண்ணை எத்துனை நாள் வீட்டில் வைத்திருக்க வேண்டும்" என தெரியாத யூசுப் கான், நாகர்ஜுனுடன் வரும் என்.எஸ்.ஜி கமாண்டர். சிறப்பாக செய்திருக்க வேண்டிய பலர் (பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய்) , சொல்ல கூடாது, பார்த்தல் சிரிப்பு தான் வருகிறது. அதனால் - 5/10.

ஒளிப்பதிவு - இயற்கையை காட்டி பேர் வாங்க பெரிய ஸ்கோப் இல்லாவிட்டாலும், படத்திற்கு தேவையானதை செவ்வனே காண்பித்திருக்கும்  ஒளிப்பதிவிற்கு - 6/10.

பாடல்கள் - படத்திற்கு தேவை இல்லாததால், தவிர்த்திருந்ததால் - 8/10.

பின்னணி இசை - மிகவும் சொதப்பிய களம் இது. கண்டிப்பாக ஜீரணிக்க முடியவில்லை - 3/10.

வசனம் - பல இடங்களில் இயல்பான நகைச்சுவை. 
"வாழத்தாரையும் வயசுப்பொன்னையும் வீட்ல வைக்க கூடாதுன்னு டயலாக். சத்தியாம எத்தன நாள்னு கூட எனக்கு தெரியாது சார்...."

"யாருன்னா யூசுப் கான் ?" "ஹ்ம்ம் பாகிஸ்தான் பௌலர்"

என பல இடங்களில் நச்சு தெறிக்கும் வசனங்கள். "பைபிள் படிக்கணும். முடியாதுனா உங்க குரான் குடுங்க எல்லாம் ஒன்னு தான்". இவ்வளவு இயல்பாக எழுதி விட்டு, கடைசி காட்சியில் "ரொம்ப குளோஸ் எஸ்கேப்" "உங்கள்ட்ட பி.ம பேசணும் நு சொல்றாரு" என காமடி செய்திருப்பது கொஞ்சம் நெருடல். எனினும் - 8/10.

நடிகர்கள் தேர்வு - வேறு வழியில்லாமல் பித்தது போல் இருந்தது பல நடிகர்களின் தேர்வு. குறிப்பாக தலைவாசல் விஜய். மன்னிக்கவும் - 4/10.

இயக்கம் - இவ்வளவு பெரிய விமானத்தை ஓட்டி, திகிலூட்டி, ஒரு உயிரை பலி குடுத்து, கடைசியில் சுபம் போட்டிருப்பதால் - 6/10.

ஒட்டு மொத்த படமாக - 6/10.

Cliche - ஏதோ கர்ணன் (படம் அல்ல இயக்குனர் பெயர்) படம் 'ஜம்பு' போல் கதாப்பாத்திரங்கள், திருப்பதியில் வரும் போகும் அனைவரும் தமிழ் அட்சர சுத்தமாக பேசுவது, போலீஸ் அல்ல என்பதை தோள்பட்டை நட்சத்திரத்தை வைத்து கண்டுபிடிப்பது, கடைசி காட்சியில் இந்தியன் தாத்தா போல் லாவகமாக தப்பிப்பது என பல. அதனால் - -12. 

மொத்தமாக.. அதான் தலைப்புலயே போட்டனே..

Saturday 5 February, 2011

யுத்தம் செய்..

2 comments:
யுத்தம் செய்.. - இன்று தான் Facebook இல் "பிறர் வாடச் செய்கை பல செய்து - நரை கூடிக் கிழப் பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - இவ்வேடிக்கை மனிதர்கள் போல் - நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்று எழுதினேன். அந்த கூற்றை உருவகப்படுத்துவது போல் அமைந்தது "யுத்தம் செய்" திரைப்படம். தமிழ் சினிமாவிற்கு ஒரு புதுவித Thriller ஐ அறிமுகப்படுத்தியதற்கு மிஷ்கினுக்கு ஒரு ஷொட்டு.


தனித்தனியாக வெட்டப்பட்ட கைகள் பெட்டிகளில் கிடைக்கின்றன. முதல் காட்சியில் இரண்டு. போகப்போக ஒன்றொன்றாக. யார் வெட்டுகிறார்கள், எதற்காக என்பது மட்டும் கதை அல்ல நீங்கள் நினைப்பது போல். இதற்கு மேல் கதையை சொன்னால் மிஷ்கின் வருத்தப்படுவார். 


ஆரம்பம் முதல் முடிவு வரை கதையை தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் இருந்து, கதாப்பாத்திரங்கள் சொன்னபடி செய்ய வைப்பது வரை வெற்றி பெறுகிறார் மிஷ்கின். இவ்வளவு தொழில்நுட்ப விஷயங்களை எவ்வாறு பிடித்தார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது. 


"அன்த கண்ணோட இமைகள் வெட்டப்பட்டிருக்கு. அது இந்த போலீஸ் ஸ்டேஷன் ல எதையோ பாத்துட்டே இருக்கு".


"இவ்வளவு சின்ன அறிவோட நீங்களே இவ்ளோ பண்ணும்போது எங்களுக்கு இருக்ற அறிவுக்கு நாங்க எவ்ளோ பண்ணனும்".


"ஓடி ஓடி களச்சுட்டோம். போக எடம் இல்ல. இனி நான் தொரத்துறேன். நீ ஊடு."


என்று ஆங்காங்கே பளிச்சிடும் சுருக் வசனங்கள் கை தட்டல் பெறுகின்றன. 

வழக்கம் போல "வாள மீனுக்கு" பாணியில் ஒரு பாடல். மிஷ்கின் பட ஹீரோ என்றால் குனிந்த தலை பல நேரங்களில் நிமிர மாட்டேன் என்கிறது. இடைவேளை நேரத்தில் தேவை இல்லாமல் ஒரு சண்டைக்காட்சி. கடைசி காட்சிகளில் சேரன் கதவை திறக்கும் போது பிளாஸ்டிக் டப்பா உருண்டது போல் வரும் பின்னணி இசைக்கு அரங்கமே சிரிப்பதை தவிர்க்கமுடியவில்லை.

சிலபல cliche க்கள் இருந்தாலும், ஒரு முழுமையான Emotional Thriller என்ற வகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி யுத்தத்தில் வென்றிருக்கிறார் மிஷ்கின்.. :)

Thursday 3 February, 2011

Best and Worst of 2010.. - The Best part..

4 comments:
Best and Worst of 2010.. - The Best part.. - Lets continue with the best of the things I have experienced in 2010..

Best Novel.. - The best novel I read in 2010 is "Oonjal". The writer is none other than late Writer Sujatha. He still lives in his novels. When I started reading, I got irritated and almost put down it. After sometime, when I continued, it became unputdownable. The story makes a strong impact on how your life turns upside down when you are fit for nothing. The same that happened to Ganguly and Dravid happens to an old man character in this novel. He who spent in lakhs for his daughter's marriage, is unable to even buy the holy thread for his sister's marriage with his outdated "Process Design". The situation comes where he comes he begs his daughter the money she saved for her marriage to make his design a success so that he can earn lakhs and perform his daugther's marriage in a grand manner. As how the process design is outdated, the person who created magics onetime becomes unwanted and out dated to everyone in his old age. Made me realize and visualize the insights of the old man. Sujatha sir.. Hats off to you..

Best Answer.. - In Koffe withKaran,

Karan Johar: If you have become "Ram Gopal Varma" when you wake up from bed, what will you do?

Ajay Devgan: "I will commit suicide".



Best Screenplay: "Toy Story 3" makes me feel to be the best screenplay I have seen in this year. The most entertaining movie I have seen this year. Usually the sequels get stuck in the cliche's and cry for their way out (for example: Dhoom2, Krish, Shrek 4,). But
Toy story 3 excels first two parts and becomes best of the the three. Tom hanks is still the same Woody. Can such a small concept be made into an excellent visual experience. Yes says Pixar. The way the movie is presented in the screen makes it more interesting and the characters still live in our hearts.

Best Movie..- The best movie undoubtedly is "The Social Network". David Fincher has proved once again that he is a master in direction. He could have made the movie boring by making it in a documentary manner. But he doesn't. Put in a great effort to mould the characters that lie in the film. Starting from Mark Zuckerberg to all the characters in the movie have been given proper importance. I have seen the movie twice and never felt as if it's boring.

Best Actor..- I regret for not seeing this movie (actually series of..) for this long. "Pirates of the Carribean" and as you guess the Best actor I have seen this year is none other than our mate "Jack Sparrow"..  sorry sorry.. "Captain Jack Sparrow". There are no words to explain Johnny Depp's involvement in bringing the character alive. One god gifted actor. If you haven't seen it yet, you will regret in your death bed. Don't give it a chance!!

Tuesday 1 February, 2011

Urgent Need for a Schindler's list??

1 comment:
This post I need much needed at this time than to post "Best of 2010". Tonight I was surfing through the channels in TV and got hold in BBC World. There was "Tropic of Cancer", a program to explore regions of Tropic of Cancer. This time it was about Bangladesh and the child labours over there. The host starts walking with a translator and a small boy who collects waste plastic bags and plastic items from road everyday. Gradually the host asks questions and the boy answers and the translator translates.

"How long have you been doing this?"
"Since I was 4. Now am 7."
"What's your work basically?"
"I have to collect the plastic waste items from road"
"What's your work timing?"
"I have to start early in morning and by afternoon I have to deliver it to the incharge person near plastic factory".

They have slowly reached the plastic factory. There the boy delivers and gets 35 rupees for that day. The host visits inside the factory and gets astonished to see all small kids working in bone melting heat. He describes that temparature inside is unbearable even for adults. Then imagine the situation of kids. A small boy Malik shows his hand which has just had a small kiss with the heater and almost skin became pale.

The host questions the incharge of these kids why they do all these non sense.
"You foreigners come once in a while and go away. Who will feed these kids after that? This is how it is. Just fill your camera and leave".

There completes the show.

I was dumbstruck. It's not only happening in Bangladesh. In India how many kids we see sleeping on roads and working in deadly factories just to fill their stomach one time a day. Government has separate Slum Clearance Board and still they are not cleared. Not even to a notifying mark. Government has SSA scheme such that all kids should be educated atleast until 14. That too is not working. But traffic police stand in all corners and collect sums of amount just for not wearing a helmet and stopping an inch over the STOP line.

In a country, where in each budget, the tax for Cars and mobile phones go down, but the tax for Petrol from outside stay still. Rice import tax stays still. Unless otherwise need arises, tax import of all needed commodities either increases or stays still.

I can only write or scream out the situation but really not capable of eradicating it. Feels ashamed. Though I cant eradicate this, I have decided to encourage them from other side. Like what actor Sivakumar is doing these many years. Educate a kid. This in turn makes them to study and not work.

I remember Oscar Schindler taking a list, including children, who gained him profit, in order to save them from Nazi's. I suppose such a list is needed now and each one of  us have to include atleast one in our list.