Sunday 28 March, 2010

குருதிப்புனல்..

3 comments:
குருதிப்புனல்.. - வெகு நாட்களுக்கு பிறகு குருதிப்புனல் பார்க்கும் வாய்ப்பு என் நண்பர் மூலமாக கிடைத்தது. தேடியும் கிடைக்காத படம் தெலுங்கு அறை பகிர்வரின் தமிழ் நண்பர்  மூலமாக கிடைத்தது. படத்தின் முதல் காட்சியிலேயே குருதிப்புனலின் விளக்கத்துடன் ஆரம்பம். காவல் துறையினருக்கு விரித்த வலையில் அப்பாவி குழந்தைகளின் பலியில் தொடங்குகிறது குருதிப்புனல். 

அரசாங்கத்திற்கு தண்ணி காட்டும் ஒரு தீவிரவாத கும்பலை மடக்கும் பணி அர்ஜுனிடம் ஒப்படைக்கப்படுகிறது. Interrogation (அதான் கேள்வி கேட்டு உயிரை வாங்கறது) துறையில் விற்பன்னரான கமலின் உதவியை நாடுகிறார் அர்ஜுன். கமலும், அர்ஜுனும் நண்பர்கள் என்பதால் அந்த வேலை சுலபமாகிறது. அவர்களுக்கு தீவரவாத கும்பலின் அத்துனை தகவல்களும் கிடைக்க ஆரம்பிக்கிறது. அதன் மூலம் திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு டிரைவர் பிடிபடுகிறான். கமல் அவனை கேள்விக்கணைகளால் தொடுக்க அவன் மசிய மறுக்கிறான். பிறகுதான் தெரிகிறது பிடிபட்டவன் வண்டியின் டிரைவர் அல்ல, இயக்கத்தின் டிரைவர் என்று. இயக்கத்தின் ஆணி வேறான பத்ரியே பிடிபட்டதை எண்ணி வியக்கிறார்கள். பிறகு பத்ரியை இவர்கள் ஆட்படுத்தினார்களா அல்லது அவன் இவர்களை ஆட்படுத்தினானா என்பதே மீதம். 

இது போன்றதொரு கதாபாத்திரத்தை தேர்வு செய்தமைக்காகவே கமலை பாராட்டி ஆக வேண்டும். முதலில் தைரியத்துடன் நாசரை கேள்விகளால் உரித்தேடுக்கும் போதும், தன குடும்பத்தின் ஆபத்தை உணர்ந்து அவருக்கு கீழ்படியும் போதும், அர்ஜுனை குற்ற உணர்ச்சியுடன் பார்த்து கூனி குருகும்போதும், சொல்ல வார்த்தைகள் இல்லை. 

நாசரும் சளைத்தவர் இல்லை. "நீ உங்க சைட்ல இருக்க. தோற்கிற சைடு. எங்க சைடுக்கு வா. ஜெயிக்கிற சைடு. " என கமலுக்கு சவால் விடுவதிலும். "உன்னால என்ன கொல்ல முடியாது. உன் மிடில் கிளாஸ் மனசாட்சி உன்ன உறுத்தி உறுத்தி கொன்னுடும்." என அழுத்துவதிலும் முத்திரை பதிக்கிறார். நாசரில்லாமல் கண்டிப்பாக குருதிப்புனல் இல்லை. 

"எந்த நிலைமையிலாவது நீயும் நானும் இத செய்வோமா" என அப்பாவியாக ஆதங்கப்படுவதிலும். நாசரை காரி உமிழ்வதிலும் நேர்மையின் வாலை பிடித்துக்கொண்டு செத்து மடிகிறார். 

ஒவ்வொரு கதப்பத்திரத்துக்கும் இருக்கும் அதன் தனித்துவும், சூழ்நிலைக்கைதி என்பதன் உண்மையான அர்த்தம், தீவிரவாதிகள் உருவாகும் விதம், நேர்மையின் விலை இவைகளை ஆர்ப்பாட்டமில்லாமல், வசூலும் இல்லாமல் பதிவு செய்த படம். தமிழ் கினிமாவில் புது முயற்சிகளை இப்பொழுது எதிர்பார்ப்பவர்கள் 1996 இல் வெளியான இப்படத்தை பூஜிக்கலாம். 

Note: This movie is inspired from the movie "Droh Kaal (Times of betrayal)" by Govind Nihalani.

Tuesday 23 March, 2010

Godavari..

5 comments:
Godavari.. - I happened see this movie last week. Already my friend said that this movie is good when I was conversing with him about "Anadh", which was also a Sekhar Kammula venture. Since all my roomies are telugu I get easy access to telugu movies. One fine night I started seeing the movie.

The film started with a beautiful scene with shore and some preaching in the back ground. The scene that introduces the hero itself is impressive.He wants to be a politician who wants to serve the people. Cliche huh! Nopes.. He gets to the Congress party office (sensor cut... ada karumamae ithu enna ketta vaarthaya?) and expresses his aim. They ask him to get last. When he says he would go and join Telugu Desam party (again censor cut.. devuda...., they fix him an appointment. Next scene our hero goes to TDP and asks for a date. They offer the same as Congress. He refuses and says "I have got appointment with cogress same day.. Can you reschedule!".

Heroine is introduced as a self motivated modern girl, who wants everyone to apologise for their mistakes but she never does. Because she never commits mistakes!!

The hero has a niece (athavathu murapponnu.. english la enna nu therla..) who likes him but never consider him a husband material because he doesn't do any such manly things even offering a hand when she's loaded.
So she's engaged and her marriage is scheduled to happen in Godavari. The heroine for relaxation of a failed alliance, hero for a failed almost called love, a small boy who failed to bring back the money he earned by selling balloons, along with him a dog and another father and daughter who are just added to have some stunt in the movie, all of them travel in the boat to Godavari. Their self realisation and the way the journey decides their life forms the rest of the story.

The characterizations, sequences, especially the cinematagrophy and not but not the leas Kamalini Mukherjee makes this movie a feel good one..

When Kamalini sings "andhamga laena.. asal aem baalaena.. ", you yourself will get angry on the guy who's ignoring her.

Anbe Sivam, a journey which makes the passangers realise what life is and what's their part in it with more earned profit and some amount of cinematic flavour is "Godavari".. Whoever liked movies like "The Terminal", "Happy Days", "It's a wonderful life", please go ahead and download this one.

P.S: I saw this without subtitles. Naan valargiraenae mummy along with my telugu roomies......

Sunday 7 March, 2010

Mechnocrats '08 - 5

1 comment:

ஒரு சிறிய, மன்னிக்கவும் கொஞ்சம் பெரிய இடை வெளிக்கு பிறகு எழுதுவதால், கடைசி பகுதியை பார்க்க விரும்புபவர்கள் கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்..

ஏழு

"ஐயோ அப்பா.." அலறினாள் கிருத்திகா. 

"ஏன் கத்தறே? அவர் அரை மைலுக்கு அந்த பக்கம் இருக்காரு. நீ கத்தற கத்துல வந்துரப்போறாரு.." சரவணன். 

"மச்சான் இவ கூட நின்னா நம்மளையும் போலி போற்றுவாணுக.. வா அடுத்து மூணு அவரும் வொர்க் ஷாப் தான். அதாவது ஒழுங்கா அட்டன்ட் பண்ணுவோம்" சொன்னவராரே கிளம்பினான் கணேஷ். சரவணனும் பின் தொடர்ந்தான் அரை மனதாக!

வொர்க் ஷாப் சிகப்பு ரோஜாக்கள் கமல் வீடு போல் இருந்தது. உள்ளே நுழைந்ததும் அறுபத்தைந்து வயது மதிப்பு மிக்க ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். 

"நீங்கள்லாம் ஏ செக்ஷனா?" முதியவர் கேட்டார்.

மாணவர்கள் ஆமாம் என்பது போல் தலையாட்டினர். 

"சரி. ஐ ஆம் அமிர்தலிங்கம். இன்சார்ஜ் ஆப் திஸ் வொர்க் ஷாப். ஈவன் ஆப்டர் ரெடைர்மென்ட் திஸ் இன்ச்டிடுஷுன் நீட்ஸ் மீ." பெருமையாக சொன்னார் தாத்த சாரி அமிர்தலிங்கம். 

"சரி உங்க எல்லாரையும் நாலு குரூப்பா பிரிக்கரேன். ஒன் பை ஒன் ஆ பௌண்டரி, பிட்டிங், போர்ஜிங் அப்புறம் வெல்டிங் எல்லாம் டெமோ பாருங்க. அடுத்த கிளாஸ் ல இருந்து பிரக்டிகல் ஆ பண்ணலாம்." 

சரவணன் இருந்த பிரிவு முதலில் பௌண்டரி இருந்த அறைக்கு சென்றது. 

"என் பேரு வெங்கடேசன். நான் தான் இங்க இன்சார்ஜ்.  பௌண்டரி நா மோல்ட் எடுக்கிறது. இதுக்கு முன்னாடி அருணா பௌண்டரி ல வொர்க் பண்ணிட்டிருந்தேன். இந்த மெல்டட் அலுமினியத்த எடுத்து மோல்ட் ல ஊத்தினா மாடல் ரெடியாயிரும். ஆனா பார்த்து ஊதணும். ஒரு தரவ என் கால் ல பட்டு தோல் உறிஞ்சிருச்சு. "

வெங்கடேசன் பௌண்டரி உடன் தன சோகக்கதையும் சொல்லிக்கொண்டே சென்றார். அவரை பார்த்து பரிதாபப்படுவதா சிரிப்பதா என தெரியவில்லை. 

நான்கு பிரிவுகளையும் பார்த்து விட்டு மாணவர்கள் அமிர்தலிங்கத்திடம் வந்தனர். 

"எல்லாரும் அடுத்த வாரம் ஒரு ஆப்சர்வஷுன் நோட் கொண்டுவந்திருங்க. அது போதும். ரிகார்ட் அப்புறம் பார்த்துக்கலாம்."

மாணவர்கள் உணவு இடைவேளைக்கு கிளம்பினர். 
"டேய் இன்னைக்கு நைட்டு சீனியர் ஏதோ மேட்ச் பத்தி பேசனும்னான்களே என்ன நு தெரியுமா உனக்கு?"  சரவணன்.

"அது ஏதோ ஹாஸ்டலுக்கு உள்ளையாம். எப்டியும் பைனல் இயர் தான் ஜெயிப்பான்கலாம்." கணேஷ்.

"நாம நல்ல விளையாடினாலும?" கேட்டன் சரவணன். 

நக்கலாக தலையை ஆட்டி சிரித்தான் கணேஷ்.

எட்டு 

'அப்புடப்புடு.. அப்புடப்புடு.. ...' 

தெலுங்கில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை மொழி புரியாவிட்டாலும் ஜெனிலியா சகதியில் புரள்வதற்காக பார்த்துகொண்டிருந்தான் ஒரு சீனியர்.
'இலாகா.. இலாகா.இலாக.. .......' சரவணன் படியேற ஏற சத்தம் ம்மியானது.  

"டேய் பர்ஸ்ட் இயர் லாம் இங்க அசம்பில் ஆகுங்கடா" ஒரு வேட்டை வெளியை நோக்கி கை காண்பித்தான் ஒருவன். அனைவரும் மந்தை ஆடுகள் போல் அவ்விடத்தில் கூடினர். 

ஹாஸ்டல் ரெப்ரசண்டேடிவ் பேசினான். "டேய் மேட்ச் நடக்கபோறது உங்களுக்கெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும். ஆளுக்கு அம்பது ரூவா கட்டி டீம் ல சேந்துக்கங்க. டீம் பேரு நாங்கதான் வைப்போம் என்ன! மச்சான் இந்த வாட்டி எந்த டீம் டா அ.கூ.ஆ. பா ?" அணி பெயர்களை நினைத்து சிரித்தான்  அவன்.

"அதென்ன டா அ.கூ.ஆ. பா?" சரவணன் வியந்தான்.

"என்ன எழவோ எவனுக்கு தெரியும்?" ஜார்ஜ் நொந்து கொண்டான். 

"அப்புறம் முக்கியமான விஷயம். நீங்க யாரும் ஜெயிக்க கூடாது. எப்டியும் விட மாட்டோம்." மறுபடி பலமாக சிரித்தான் ரெப்பு..
"அவ்ளோ தான் டா போலாம். நாளைக்கு ஒவ்வொரு ரூமுக்கு ஒருத்தன் காச கலக்ட் பண்ணி என்கிட்டே கொடுத்ருங்க.. இப்போ போலாம்"

நிம்மதி பெருமூச்சுடன் எழுந்த சரவணனை ஒரு குரல் திருப்பியது. 

"டேய் எங்க போற?" கண்ணம்மாவின் தம்பி கேட்டான்.

"ரூமுக்கு னேன்." பரிதாபமாக சொன்னான் சரவணன். 

"இப்பவே பொய் என்ன பண்ண போற?"

"நெறைய வரையனும் னேன். இ.டி. ல. "

"எனக்கும் தான் வரையனும். சரி ரூமுக்கு வா.. ரெண்டு சீட் தரேன் வரைஞ்சு காலைல குடுத்துரு என்ன?"

முழித்தான் சரவணன். "இன்னா டா ...!!" குரலை உயர்த்தினான் கண்ணம்மா தமையன். 

"சர்ணேன் குடுங்க". 

இரவு முழுவதும் கிட்ட தட்ட மூன்று மணி வரை அவனுடைய மற்றும் கண்ணம்மாவின் பாலைப்போன தம்பியினுடைய படங்களையும் போட்டு முடித்தான். காலை எட்டு முப்பதிற்கு வழக்கம் போல் எழுந்து, சிற்றுண்டி உண்ணாமல் கிளாசுக்கு சென்றான். முதல் இரண்டு மணி நேரமும் இஞ்சினியரிங் டிராயிங் எனப்படும் இ.டி. 

கண் சிவக்க ஹாலுக்கு சென்றவன் பக்கத்தில் கிருத்திகா. 

"நீ எங்க இங்க?" ஆச்சரியமாக கேட்டான் சரவணன்.

"இன்னைக்கு  வளனரசு வரலாம். அதனால ரெண்டு கிளாசையும் ஜவகரும் சிவகுமாருமே பார்த்துக்கறாங்க. எல்லாம் டிராயிங்கும் முடுச்சிட்டியா?" கிருத்திகா

"உம்ம்ம். ஒரு வழியா." என சீட்டை திறந்தான்.

"என்ன டிரயிங்க்லாம் வேற மாறி இருக்கு!" சந்தேகமாக கேட்டாள் கிருத்திகா.

திருப்பி பார்த்த சரவணனிற்கு அதிர்ச்சி. கொண்டு வந்திருந்தது கண்ணம்மா தம்பியுடைய ஷீட்டுகள்.

Monday 1 March, 2010

நாணயம்..

1 comment:
நாணயம்.. - படத்தின் முன்னோட்டத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தபோதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. திருட்டு டி.வி.டி. யில் தான் பார்த்தேன். படம் முடிந்தவுடன் அதற்காக நொந்து கொண்டேன்.

ஆயிரத்தில் ஒருவனை நான்கு முறை தியேட்டர் சென்று பார்த்ததில் ஒரு முறை குறைத்து இப்படத்தை பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை யூகிக்க முடிந்த ஆனாலும் வித்தியாசமான திருப்பங்கள்.

பேங்க் ஆபிசர் எஸ்.பி.பி யை ஒரு தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறார் பிரசன்னா. சொந்த தொழில் தொடங்க வங்கியில் கடன் வாங்க முயற்சிக்கும் பிரசன்னாவை தன வங்கியில் முதலில் சிறிது காலம் வேலை பார்த்து அங்கயே கடன் உதவி செய்து தருவதாக சொல்கிறார் எஸ்.பி.பி. ஒரு தருணத்தில் யாருமே கொள்ளை அடிக்க முடியாத  வங்கியை வடிவமைக்கிறார் பிரசன்னா. அதை அவரை வைத்தே கொள்ளையடிக்க  திட்டம் இடுகிறார் சிபி ராஜ். அதன் பின்புலம் என்ன? காரணம் என்ன?

கதையை விட திரைக்கதியில் மிகுந்த கவனம் செலுத்தும் கிறிஸ்டோபர் நோலன் முறையை பின்பற்றியிருக்கிறார் இயக்குனர். எந்த சமரசமும் இல்லாமல் கதைக்கு தேவையான நடிகர்களையும் கதாபாத்திரங்களையும் வைத்து எளிமையான முறையில் கதை சொல்லிய விதம் அபாரம்.

வங்கிக்கொல்லைக்கான நோக்கம் (motive) மேலோட்டமாக பார்க்கும் பொது சாதரணமாக தெரிந்தாலும், கொஞ்சம் deeepppp ஆ யோசிச்சு பார்த்த சரின்னு தான் படுது.

தமிழ் சினிமாவில் மற்றுமொரு நல்ல முயற்சியை தவற விட்டு விடாதீர்கள்.. அப்புறம் ஒங்க இஷ்டம்..