Saturday 12 December, 2009

Mechnocrats '08 - 3

இரண்டாம் பகுதி... முதல் பகுதிக்கான தொடர்பு இரண்டில் உள்ளது..

மூன்று:


சரவணனும் ஜார்ஜும் சி 62 வை தேடி ஒவ்வொரு அறையாக சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு அறையிலும் வித விதமாக ராகிங் கூத்து நடந்துகொண்டிருந்தது. தூண்டிலில் மாட்டிய மீன் போல ஒவ்வொரு முதல் வருட மாணவனும் துடித்துக்கொண்டிருந்தான். சரவணன் ஒவ்வொரு அறையாக நோட்டம் விட்டுக்கொண்டே சென்றான். மூன்றாவது மாடியின் இடது கோடியில் இருந்தது சி 62 . சரவணனும் ஜார்ஜும் அறுபத்தி ஆறிலிருந்து பின்னோக்கி சென்றனர்.

சி 66

தரையில் நீச்சலடித்து கொண்டிருந்தான் வெறும் உள்ளாடையுடன் எதிர்கால ஐன்ஸ்டீன்.

சி 65

இல்லாத விக்கட்டை நோக்கி ஓடி வந்து ரன் அவுட் ஆகிக்கொண்டிருந்தான் ஒருவன்.

"என்னடா ஒவுட்டானியா ரீச் பண்ணிட்டியா? "

"அவுட் ஆயிட்டேன் னேன்"

"நான் பாக்கலியே மச்சி"

"டேய் ரீப்ளே போடு"

சி 64

பூட்டி இருந்தது.

சி 63

புன்னகையை மட்டுமே ஆடையை அணிந்தபடி சீனியர்களிடம் இடம் சுட்டி பொருள் விளக்கிக்கொண்டிருந்தான் ஒருவன்.

சரவணனுக்கு இதயமே நின்று விட்டது. சி 62 ஐ நெருங்கும்போது. உள்ளே மூன்று பேர் உட்கார்ந்துகொண்டு இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைக்கோலாற்றினை விலாவரியாக அலசிக்கொண்டிருன்தனர்!

"அண்ணேன்" சரவணன் பாசத்தோடு அழைத்தான்.

"யார் ரா நீ?"

"நீங்க தன வரச்சொன்னேங்க.." சந்தேகமாக கேட்டன் சரவணன்.

"ஓஒ... அப்டியா.. வா வா வா...." பாசமாக அழைத்தான் சரவணன் வராவிட்டால் வாழ்வாதாரத்தை அறுத்துவிடுவதாக கூறியவன்.

சரவணனுக்கு தன் மேலே கோபமாக வந்தது. அவனே மறந்து தொலைத்தும், ஆர்வமாக தானே வந்து வலையில் சிக்கியதை எண்ணி நொந்து கொண்டான்.


"என்னடா யோசிக்கிற? தேவையில்லாம வந்து மாட்டிக்கிட்டோமே நா? "

அவன் சரியாக கேட்டது சரவணனின் கோபத்தை மேலும் அதிகப்படித்தியது.

"உங்கள வெத்தல பாக்கு வச்சு கூபுடனுமா. வாங்க சார் உள்ள." ஜார்ஜும் இழுத்து வரப்பட்டான் வலைக்குள்.

வெள்ளையாக, உயரமாக விஷாலுக்கு பெயின்ட் அடித்து கண்ணாடி மாட்டியது போல் இருந்த ஒருவன் கேட்டான்.

"உன் பேரென்ன ராஜா?"

"சரவணன்."

"நான் அவன கேட்டேன்"

"ஜார்ஜ் னேன்"

"ஏன் முதல் தடவ சொல்லல?"

"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!" ஜார்ஜ்.

"சரி இப்ப நீ சொல்லு? என்னென்ன கிளாஸ் போயிருக்கு?" கஷ்டமான கேள்வியை கேட்டான் வெள்ளை விஷால்.

"இங்கிலீஷ், பேசிக் மெகானிகல், பேசிக் எலக்ட்ரிகல், அப்புறம் ...." சரவணன் யோசிப்பதற்குள் அடுத்த கேள்விக்கணையை தொடுத்தான்

கருப்பாக, ஒல்லியான தேகத்துடன் இருந்த மற்றொருவன்.

" வந்ததுலயே செம கட்ட யாரு?" சிரித்தபடி கேட்டான்.

"ஹி.. ஹி.. ஹீ... " இருவரும் சிரித்தனர்.

"டேய் அவன் என்ன தொறந்தா காட்டிக்கிட்டு இருக்கான்? பதில் சொல்றா.." கோபப்பட்டான் வெள்ளை மச்சான்.

சிரிப்பை நிறுத்தியபடி சரவணன் சொன்னான் " எலக்ட்ரிகல் மேம் செவப்பா சூப்பரா இருந்தாங்கன்னே"

"பேரென்னடா?" கேட்டான் கறுத்த மச்சான்.

"கண்ணம்மா னேன்..." சரவணன் சொல்லி முடித்த அடுத்த வினாடி கன்னத்தில் இடி விழுந்தது போல் இறங்கியது அந்த அரை.

இதுவரை வாயே திறக்காமல் இருந்த மூன்றாமவன் சரவணனின் கன்னத்தில் தன் கோபத்தை இறக்கி விட்டு வெளியேற சித்தமானான்.

"டேய் மச்சி .. சும்மா டா.." சமாதானப்படுத்தினான் விஷால்.

"போங்கடா விலைமாதர் மகன்களா" அவர்களை விட்டு விட்டு அவர்கள் அம்மாக்களை ஏசிவிட்டு கோபமாக வெளியேறினான் மூன்றாமவன்.

அவன் முழுவதுமாக மறைந்த பிறகு, சரவணன் தையிரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டான்.

"ஏன்னேன் அடிச்சிட்டு போறாரு?"


"அவங்கக்காவ சூப்பர் பிகருன்னு சொன்ன அடிக்காம விட அவன் என்ன "கிரி" வடிவேலுவா? " சொல்லிவிட்டு பேய் போல் சிரித்தனர் விஷாலும் கருப்பனும்.

சரவணன் ஜார்ஜை பார்த்தான். ஜார்ஜும் சிரித்துக்கொண்டிருந்தான்..


நான்கு:

முன்தினம் அறைக்கு திரும்ப நேரமாகிவிட்டதால் சரவணன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். எட்டு மணி வரை. விறு விறுவென எழுந்து காலைக்கடன்களை செய்ய பாத்ரூமுக்கு ஓடினான். அவன் தளத்தில் நான்கு குளியலறைகளும், படியேறி அடுத்த தளத்திற்கும் அவன் தளத்திற்கும் செல்லும் இடைவெளியில் நான்கு கழிவறைகளும் இருந்தன. வழக்கம் போல் அன்றும் அனைத்தும் நோ வாகன்சியாக இருந்தன.

சரவணன் கண்ணில் இருந்து ஜலம் கொட்டாத குறையாக அடி வயிறு முட்டியது. கதவை பலமாக தட்டினான். அதிர்ஷ்டவசமாக ஒருவன் வெளியேறினான் கையில் பிரஷும், வாயில் நுரையுமாக.

"ஏங்கா உகிர் போற மாகி தற்ற.. சீக்லம் பொய் என்ன பங்க போற" என்றான் நறுமனும் வீசும் பேஸ்ட் வாயுடன்.

எதையும் காதில் வாங்காதவனாக சரவணன் காரியமே கருத்தாக கழிவறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டான். பத்து நிமிடங்களுக்கு பிறகு மூச்சை இழுத்து விட்டபடி சந்தோசமாக வெளியே வந்தான். அடுத்து குளியலுக்கு அடிதடி. அடித்து பிடித்து குளிக்க இடம் பிடித்து, அரைகுறையாக குளித்து விட்டு எட்டு முப்பதிற்கு சிற்றுண்டிக்காக மெஸ்சுக்கு ஓடினான்.

மெஸ்ஸை இரண்டாக பிரித்திருந்தார்கள் - முதல் வருடம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள். சரவணன் முதல் வருட மாணவர்களுக்கான மெஸ்சுக்கு சென்று தட்டை கழுவ சென்றான். பல நான்காம் வருட மாணவர்களும் சில முதல் வருட மாணவர்களும் இருந்தனர். முதல் வருட மாணவர்கள் அனைவரும் சீக்கிரமே சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர். சரவணனும் சிலருமே பாக்கி. அன்று தோசையும், கிச்சடியும் மெனு. தோசை வரிசையில் சென்று நின்றான். வரிசை மிக மெதுவாக நகர்ந்தது.

சரவணனின் முறை வந்தது. தட்டை நீட்டும் சமயம், மற்றொரு தட்டு அவன் முன் நீண்டது. சரவணனை விட குள்ளமான அனால் தடிமனான நான்காம் வருட மாணவன் நின்று கொண்டிருந்தான்.

"அண்ணேன் என் டர்ன்.. கிளாசுக்கு வேற லேட்டாயிருச்சு.. " பயந்து கொண்டே சொன்னான் சரவணன்.

"அதுனால.." கோபமானான் அவன்.

"அதுனால பரவால்ல நீங்க சாப்பிடுங்க.. ஹீ.. ஹீ.." சமாளித்தான் சரவணன்.

தோசையை தட்டிலிருந்து வாயில் திணித்தவாரே சரவணனை முறைத்துக்கொண்டு சென்றான் அவன். கடைசியில் கிடைத்த கிச்சடியை தின்று விட்டு, பாதி வயிறை ரொப்பிக்கொண்டு ஒன்பது பத்திற்கு அங்கிருந்து கிளம்பினான் சரவணன்.

விடுதியில் இருந்து வெளியே வந்து, பிரதான வழியை கடந்து, சிவில் டிபார்ட்மென்ட் கீழ் தளத்தின் வழியாக தன் வகுப்பறை இருத்த பி பிளாக்கிற்கு சென்றான். அவன் வகுப்பறை முதல் தளத்தில் இடப்புரமிநின்று மூன்றாவதாக இருந்தது. வாசலை வந்தடைந்தான். உள்ளே எட்டி பார்த்தான் இயற்பியல் ஆசிரியை ராஜாத்தி நின்று கொண்டிருந்தார். தயங்கித்தயங்கி போய் நின்றான்.

"ஒய் ஆர் யு லேட்?"

"ஹாஸ்டல்ல லேட்டாயிருச்சு மேடம்.."

"டோன்ட் கிவ் மீ ரீசன்ஸ்." முந்தைய கேள்விக்கு முரணான பதிலை தந்தார் ராஜாத்தி.

இப்பொழுது என்ன சொல்வதென்று சரவணனுக்கு விளங்கவில்லை. தலை குனிந்த படி நின்றுகொண்டிருந்தான்.

"இந்த மாறி பிகேவியரெல்லாம் ஐ வோன்ட் என்கரேஜ். கெட் அவுட் ஆப் மை கிளாஸ்."

பள்ளி போல் இரண்டு நிமிடம் கழித்து அனுமதிப்பார்கள் என்று நின்று கொண்டிருந்தான் சரவணன். அந்த மாதிரி எதுவும் நிகழவில்லை. அப்பொழுது இடது பக்கத்திலிருந்து ஏதோ ஒலி கேட்டு திரும்பினான் சரவணன்.

"பிஸ்.. பிஸ்.. " அழைத்தான் கார்த்திக் கணேஷ்.

கண்களால் என்ன என்று கேட்டன் சரவணன். அவன் சரவணை அவன் அருகே அழைத்தான். சரவணனும் சென்றான்.

"என்ன சொல்லுது குண்டம்மா.." ராசாத்தியின் சற்றே பெரிய உடம்பை கிண்டலடித்தான் கார்த்திக்.

"உள்ள விடாதாம்.. கத்துது.." சரவணன் ராசாத்தியை அக்றிணையாகவே மாற்றி விட்டான்.

"அப்ப ஏன் நிக்கற வா போவோம். " கூப்பிட்டான் கார்த்திக்.

"எங்க?!" வியந்தான் சரவணன்.

"ஒரு சூப்பர் எடம் இருக்கு. சீனியர் அண்ணன் சொன்னாரு. காலேசுக்குள்ளயே. வா.."

"பரிச்ச ஏழுத விடலேனா" சரவணன் பயத்துடன் கேட்டன்.

"அதுக்கு சிக்ஸ்டி பர்சன்ட் அட்டெண்டன்ஸ் இருந்தா போதும். இந்த ஒரு கிளாஸ் நாலா ஒன்னும் ஆயிறாது வா.."

சரவணனுக்கு வேறு வழி தெரியாததால் அரை மனதாக கிளம்பினான்.

"எங்க போறோம்"

"பம்ப் ஹவுஸ்....."

11 comments:

  1. awesome introduction expected for pumphouse..dont give me silly reasons arumai.

    ReplyDelete
  2. Thanks Sudharshan.. If anyone feel the post is a bit too long, comment it out here..

    ReplyDelete
  3. I am not so sure sudharshan.. Since I was not in hostel.. But I heard of dosai in hostel.. May be not in morning.. Mechnocrats -- got any idea?

    ReplyDelete
  4. Poduvanganga... naan oru thadava saapitirukaen.

    ReplyDelete
  5. It is the better than the last one !!!

    Looks nice man ! - gud going...

    ReplyDelete
  6. There's a logical mistake in this post? Was anyone able to find it?

    ReplyDelete
  7. Oops for not reading this all these days. enkitta kelu ... morn dosa saturday mattum thaan .. adhuvum kevalamaana rava dosai ...

    hostel pathi edhaavathu matter venum na contact pannu .. ;)

    ReplyDelete
  8. Please reveal your identity maddy.. I think its Hari madhavan..

    ReplyDelete
  9. damn... its a lengthy blog man... but u made me read since it was interesting...

    ReplyDelete